search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cases"

    • சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடந்தது.

    விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கோர்ட்டு மற்றும் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜ பாயைம் ட்ட சட்டப்பணிக் குழுக்கள் சார்பில் கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 921 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 பயானளிகளுக்கு கிடைத்தது.

    இதில் வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு எலும்பு முறிவு மருத்துவர், வங்கி மேலா ளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்துள்ளார்
    • லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:


    கரூர் எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையின் போது 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாத 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகளை நீர் நிலைகள் அருகில் செல்வதையும், சிறார்களை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை அனுமதிக்காமல் ெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நீதித்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கொறடா கோவி .செழியன் பேசியதாவது:-

    இக்கூட்டத்தில் உண்மை க்கு புறம்பானவழக்குகள், முந்தைய கூட்டத்தில் உறுதி செய்யப்படாதவை, புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணை முடிவுற்ற வழக்குகள், தீருதவித்தொகை நிலுவை, வட்டாட்சியரிடமிருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு பொருள் அடக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகள் மேம்பாட்டிற்கான அறிவுரைகள் நல்குதல், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தேர்வு ஆயத்தப் பயிற்சிகள் அளிக்க உறுதுணை நல்குதல், பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி களின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் அரசுப் பணியிடங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல், சிறப்பு உள்ளடக்கத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆய்விடுதல், புதிதாக அறிவுரைகள் வழங்கல், இத்திட்டங்களை பரப்பும் வகை செய்தல், தாட்கோ திட்டங்களை பரப்பும் வகை செய்தல், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை, பயிர் நிலம் வழங்குதலையும், வழங்கியதை பேணுதலையும் ஆய்விடல், நில உச்சவரம்பு நிலங்கள், பூமிதான நிலங்கள் இவற்றை ஆதி திராவிடர்களுக்கு அளித்தலையும், நிலங்களை பேணுதலையும் ஆய்விடல், ஆதிதிராவிடர் மேம்பாடு குறித்த பொதுவான ஆலோசனை வழங்கல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பொருள் விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 3,568 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,496 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டின் முதல் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடியில் 4 அமர்வுகளும், கோவில்பட்டி யில் 2 ஸ்ரீவைகுண்டத்தில் 2 திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள்,வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 306 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 251 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.அதன் மொத்த தீர்வு தொகை ரூ. 6 கோடியே 12 லட்சத்து 73,454.

    மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3,262 வழக்குகளில் ரூ.1 கோடி 99 லட்சத்து 27,247 மதிப்புள்ள 3245 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    3,568 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,496 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி பீரித்தா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்து லெட்சுமி, பணியாளர்கள் பால் செல்வம், நம்பிராஜன், சத்யா பாண்டி ஆகியோர் செய்திருந்தார்கள்.

    • நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் நடத்தப்பட்டது
    • 4,235 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்கள் ஆகிய வங்கிக்கடன் உள்ளிட்ட 2000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

    நெல்லை:

    மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் 2023 -ம் ஆண்டுக்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் நடத்தப்பட்டது. இதற்காக 26 அமர்வுகள் நியமிக்கப்பட்டனர்.

    பாளையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவருமான குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, போக்சோ நீதிபதி அன்பு செல்வி மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் பன்னீர்செல்வம், திருமகள், குடும்ப நல நீதிபதி குமரேசன், மகளிர் நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்த வேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிபதி மோகன்ராம், ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிபதி செந்தில் முரளி, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி வள்ளியம்மாள் மற்றும் நீதிபதிகள் திருவேணி, ஆறுமுகம், விஜய் பாக்யராஜ், கவிப்பிரியா, அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் வக்கீல்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் முத்து சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்பட மொத்தம் 4235 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்கள் ஆகிய வங்கிக் கடன் உள்ளிட்ட 2000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
    • வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் செங்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காசோலை மற்றும் ஜீவனாம்சம் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக முடிப்பது குறித்து சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.

    வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும், நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, மூா்த்தி, சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்றார்.

    முகாமில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத காசோலை மற்றும் ஜீவனாம்சம், பாகபிரிவினை வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்த்து வைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வக்கீல்கள் மாரியப்பன், சக்திவேல், வெங்கடேஷ், நித்யானந்தம், பழனிக்குமார், வீரபாண்டியன், சிவசுந்தரமூர்த்தி, இந்திரா, பாத்திமா கலிலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,069 வழக்குகள் பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
    • பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கையால் குற்றங்கள் மற்றும் ஓரளவிற்கு விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் இதர பிரிவு மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வழிப்பறி, திருட்டு போன்ற வகையில் 286 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 வழக்குகள் கண்டுபிடிப்பு குற்றவாளிகளிடமிருந்த நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்குழந்தைகள் பாலியல் தொடர்பான 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 549 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 204 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 224 பேர் இறந்துள்ளனர். காயம் ஏற்பட்டதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 723 பேர் காயமடைந்துள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற வகையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 166 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப்பட்டு வந்த 42 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 128 ரவுடிகளில் 14 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 43 திருந்தி வாழ்ந்து வருகின்றனர். 15 பேர் சிறையில் உள்ளனர். திருந்தி வாழும் பட்டியலில் 6 பேர் உள்ளனர். பல்வேறு காரணங்களால் 379 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது விலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதா ரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47).

    இவர் மீது ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சிலிண்டர் திருட்டு வழக்கில் செல்லத்துரையை கைது செய்ய கோடியக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். இருந்தாலும் போலீசார் அவரை பிடித்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார் (24) ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோரை குத்தினர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தாக்கி விட்டு வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். செல்லத்துரையை சக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீசா ர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும், இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை பார்த்தார்.

    மேலும் தப்பி ஓடிய வீரக்குமாரை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கை.
    • குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டக்னர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்த ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.அவற்றை விரைந்து தீர்வு காணக்கோரியும், நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்றவும் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 1,952 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் தீா்வுத் தொகை ரூ.39.12 கோடியாகும்.  

    • விரிவான நில தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சொத்துப்பிரச்சினை வழக்கில் நில விவரங்களை, விரிவான நில தகவல் இணையதளத்தில் (சி.எல்.ஐ.பி.) பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த சிவில் வக்கீல்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வக்கீல்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்களது வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை கோர்ட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது, தானாகவே தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    மேலும் வக்கீல்களும், பொது மக்களும் மேற்கூறிய சி.எல்.ஐ.பி. இணையத்தில் ஒரு சொத்து சம்பந்தமாக தற்போது வில்லங்கசான்று பதிவுத்துறையில் இருந்து பெறுவது போலவே, நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய வசதியாக அமையும். பதிவுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    ×