search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvIND"

    • சட்டோகிராம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா விலகியதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்றும் 2வது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உன்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்காளதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி சட்டோகிராமில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • ஒருநாள் போட்டியில் கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்.
    • அதிவேக 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    வங்காளதேசம் அணிக்கு எதிராக சிட்டாகாங்கில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்தார். இதில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக பதிவானது.

    இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் ஒரு நாள் போட்டியில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை கிஷன் முறியடித்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 112 பந்துகளில் இந்திய வீரர் சேவாக் 150 ரன்கள் அடித்திருந்தார். 


    இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக 150 ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அதை முறிடித்துள்ள கிஷன், நேற்றைய போட்டியில் 103 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஷான் கிஷன் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் பெரிய வீரர்கள் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் விளையாடுகின்றனர். அதனால் இந்த நிலையில்தான் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம் பெறுவீர்கள்,

    ஏனெனில் இது ஒரு வாய்ப்பு, நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற வேண்டும், ஒரு பெரிய வீரர் இப்படித்தான் உருவாகிறார், அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து நான் யோசிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடுவதே எனது வேலை. நான் அதிகம் பேசுவதில்லை, எனது பேட் தான் பேச வேண்டும் என நினைக்கிறேன். 


    நான் விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்ட்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, அவர்கள் வழியில் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சிக்கிறேன். நாங்கள் எந்த லீக் ஆட்டத்திலும் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்.

    கோலியுடன் இணைந்து பேட் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அந்த நேரத்தில் அது என் மனதில் இல்லை. அவருடன் பேட்டிங் செய்ய நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து இந்திய அணி சாதனை படைத்தது.
    • தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார்.

    சிட்டகாங்:

    இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,

    மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
    • இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

    • வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
    • இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.

    இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    • உள்நாட்டு கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்
    • ரஞ்சி கோப்பையில் ஒரு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்

    இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு 19 வயது. அதன் பிறகுடெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.

    இதுவரை ஒரு டெஸ்ட், ஏழு ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை ரஞ்சி டிராபியில் 353 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    2019-2020 ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

    வங்காளதேச அணிக்கெதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பிடித்திருந்தார். அவர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடி அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்தால் அறிமுக போட்டிக்குப்பின் 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    • இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
    • காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

    சிட்டகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. கேப்டனாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வங்காளதேசம் தொடரை கைப்பற்றியது
    • இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்.

    சிட்டாகாங்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை வீழ்த்திய வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.

    காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர். சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இன்றைய போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா ? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    • வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    மிர்புர்:

    3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை.
    • பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    சிட்டாகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே இழந்து விட்டது. முதல் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி வரை நெருங்கி வந்த வாய்ப்பை பறி கொடுத்தது. பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி , ஷிகர் தவான் ஆகியோர் வங்காளதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்கள் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவானுடன இணைந்து ராகுல் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடியில் உள்ளனர்.

    வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது.

    சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மெகிதி ஹசன் மிராஸ், சகீப்-அல்-ஹசன் , கேப்டன் லிட்டன் தாஸ் , மகமதுல்லா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

    ×