search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அதிக முறை 400 ரன்கள் - தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்த இந்தியா
    X

    290 ரன்கள் எடுத்த இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி

    அதிக முறை 400 ரன்கள் - தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்த இந்தியா

    • ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து இந்திய அணி சாதனை படைத்தது.
    • தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார்.

    சிட்டகாங்:

    இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். அவர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் 6-வது முறையாக 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    Next Story
    ×