search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்
    X

    ரோகித் சர்மா

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்

    • முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி சட்டோகிராமில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    Next Story
    ×