search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvIND"

    • வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    • புஜாரா, கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இது டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3-வது நாள் ஆட்ட இறுதியில் களமிறங்கிய வங்காள தேச அணி 12 ஓவர் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து.

    • வங்காள தேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
    • சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 404 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் புஜாரா சதம் விளாசி அசத்தினர். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேஎல் ராகுல் அறிவித்தார்.

    இதனால் வங்காள தேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    • குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
    • வங்காள தேசம் தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 28 ரன்கள் எடுத்தார்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் நஜ்முல் உசேன் முதல் பந்திலேயே சிராஜ் பந்துவீச்சில் பந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். அடுத்து வந்த யாசிர் அலி உமேஷ் யாதவ் வேகத்தில் சிக்கி அவுட்டானார். இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.

    வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

    பாலோ ஆனை தவிர்க்க அந்த அணி இன்னும் 72 ரன்கள் எடுக்க வேண்டும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேச அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்களும் லிண்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்தனர். ஹாசன் மிர்ஸ் 16 ரன்களுடனும், எபடோட் ஹொசைன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே எபடோட் 17 ரன்னிலும் மிர்ஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காள தேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர்.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் 20 ரன்னிலும் கே.எல்.ராகுல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் டைஜூல், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
    • சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

    புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

    முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். எபாதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293 ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2 ஓவரில் 300 ரன்னை தொட்டது.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்து இருந்தது.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 87-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 13-வது அரைசதமாகும்.

    இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ரன்களை குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ரன்னிலும், குல்தீப் யாதவ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சிராஜ் 4 ரன்னில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    வங்காள தேசம் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
    • வங்காள தேசம் அணி தரப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். பொதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293-வது ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 348 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 40 ரன்னிலும் குல்தீப் யாதவ் 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.
    • வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார்.

    இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடினார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் பொறுமையாக விளையாடினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது.

    வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.
    • 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    சட்டோகிராம்:

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி. சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.

    இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2-வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.

    • இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
    • ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.

    தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.

    இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

    • சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார்.
    • ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார்.

    சிட்டகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடனும், இரண்டு வேகப்பந்து வீரர்களுடனும் களம் இறங்கியது. இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:-லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

    சகீப் அல்-ஹசன் (கேப்டன்), நஜிமுல் உசேன், ஜாகீர் உசேன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரகீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெகிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், காலெத் அகமது, எபாதத் உசேன்

    இந்திய அணி பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கமே ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 41 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார்.

    ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 45 ஆக இருந்தது. அடுத்து வந்த விராட் கோலி(1 ரன்) வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

    • ஒருநாள் போட்டியின்போது உம்ரான் மாலிக் பந்தில் காயம் அடைந்தார்
    • எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை இடம் பிடிப்பது குறித்து முடிவு தெரியும்.

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. நாளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா காயத்தால் விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை போட்டி தொடங்கும் நிலையில் வங்காளதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, சாகிப் அல் ஹசன் விலா எழும்பில் தாக்கியது. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அப்போது ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

    இன்று பயிற்சி மேற்கொண்டபோது, வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் பயிற்சியில் இருந்து விலகி எக்ஸ்-ரே எடுப்பதற்கான மருத்துவமனை சென்றுள்ளார். இன்று மாலைதான் முடிவு தெரியும். அதன்பின் சாகிப் அல் ஹசன் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வங்காளதேச அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ×