search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குல்தீப் அசத்தல் பந்து வீச்சு: 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் 8 விக்கெட்டுகளை இழந்து திணறல்
    X

    குல்தீப் அசத்தல் பந்து வீச்சு: 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் 8 விக்கெட்டுகளை இழந்து திணறல்

    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர்.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் 20 ரன்னிலும் கே.எல்.ராகுல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் டைஜூல், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×