search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் அவுட்: 2-நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 348 ரன்கள் குவிப்பு
    X

    ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் அவுட்: 2-நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 348 ரன்கள் குவிப்பு

    • இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
    • வங்காள தேசம் அணி தரப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். பொதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293-வது ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 348 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 40 ரன்னிலும் குல்தீப் யாதவ் 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×