search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Program"

    • தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

    சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி,ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல். ஏ.,வும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு விளம்பரத்தை துவக்கி வைத்தார். இதே போல மோட்டார் சைக்கிளில் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக துணிப்பை வழங்கும் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆறுமுகத்தின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார். பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு இலவச துணிப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், பொங்கலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் பல்லடம் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிதா,இளைஞர் அணி ராஜேஸ்வரன், தொண்டரணி பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒருவரிடமிருந்து எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதேஉரிமையை அவருக்கு நாமும் வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி முன்னிலை வகித்தார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து உலக மனித உரிமை தினநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    ஒருவரிடமிருந்து எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதேஉரிமையை அவருக்கு நாமும் வழங்க வேண்டும். யாரும் யாரையும்அடிமைப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தும் தெருநாடகத்தினை மாணவர்கள் பொதுமக்களிடையே நிகழ்த்தியும் , மனித உரிமைகள்தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கி மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின் தலைவர் கதிர்வேல், செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிச்சாமி, ரோட்டரி தொழிற்கல்வி பயிற்சியின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், பல்லடம் அரிமா சங்கம்,கோல்டன் வீல்ஸ், ஈரோடு பினீக்ஸ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஆகியோர் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகள் வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலாதேவி, பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, அரிமா சங்கத் தலைவர் நடராஜன், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா தேவி ,மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்து விளக்கி பேசினார்.பின்னர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு குறித்த வாகன ஊர்வலம் நடைபெற்றது.

    • இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதன்மை அலுவலர் பசவண்ணா முன்னிலையில் கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியவாறு, துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருந்தியல் சங்க நீலகிரி தலைவர் பேராசிரியர் வடிவேலன், செயலாளர் கணேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். பேரணியில் கவுதமராஜன், பாபு, மெய்யநாதன், காளிராஜன், பிரவின் உள்ளிட்ட பேரசிரியர்கள், மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் நடக்கிறது.
    • பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் 1-11-2022 முதல் 30-11-2022 வரை நடக்கிறது. கனரா வங்கியின் (மாவட்ட முன்னோடி வங்கி) சார்பாக காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம்,மாவட்ட வளர்ச்சி அதிகாரி (நபார்டு) அசோக்குமார், வங்கியாளர்கள் , அனைத்து தொழில் முனைவோர், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் கூறுகையில், நிதி நிறுவன மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை மேம்படுத்துதல், வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களுக்கான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை , பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வங்கியின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் நிலையில் அதனை அந்தந்த வங்கியின் இணைய தளத்தில் புகாராக பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் அதனை ஆர்.பி.ஐ. இணையதளத்தில் காணும் வங்கி குறை தீர்ப்பு அதிகாரியிடம் cms.rbi.in என்ற இணையதளம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றார். 

    • காங்கயம் களிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
    • காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் விஜயகுமாரி தலைமை வகித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பள்ளி மாணவிகள் அழைத்துவரப்பட்டு பாலியல் வன்கொடுமை தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    மேலும், குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பதுடன், இலவச தொலைபேசி எண் 1098 தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

    காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் விஜயகுமாரி தலைமை வகித்தாா்.இந்நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 1098 என்னும் சைல்டு லைன் எண்ணின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.இதில், காங்கயம் களிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவினாசி:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு அவிநாசி முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க கழிவறைகளை பயன்படுத்திய பிறகு சோப்பு கொண்டு கை கழுவதுதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனி நபா் கழிப்பிடம் அமைக்க ரூ. 8,000 மானியம் வழங்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    • திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

    திருச்சி:

    திருச்சியை அடுத்த நவலூர் குட்டப்பட்டு பகுதியில், பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்களால் மக்கள் நலனுக்காக சமீப காலமாக அதிகரித்து வரும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊர் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பண மோசடி, ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், அது தொடர்பாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை ஊர் தலைவர் எஸ்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஊர் துணை தலைவர் எஸ்.கலையரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கவுன்சிலர், பட்டையார், மணியார், வார்டு உறுப்பினர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சங்கர் ஆகியோர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து பிஷப் கல்லூரி மாணவர்களான ஜாஸ்மின் சிந்தியா, ஜோஸ்வா சாமுவேல், ஜெயவர்ஷினி, சுதர்ஷனன் ஆகியோர் நிகழ்ச்சியினை நடத்தினர். நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவர் சுதர்ஷனன் தொகுத்து வழங்கினார்.

    முடிவில் ஜாஸ்மின் சிந்தியா நன்றி கூறினார். இணையதள குற்றங்கள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஆசிரிய ஆலோசகரான சாம்சன் வாழ்த்துரை வழங்கினார்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • ஊழலற்ற பாரதம் - வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து ஊழலற்ற பாரதம்- வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சுரேந்திர கெளங்கர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது. பொது நலம் சார்ந்த சிந்தனை உடையவர்களாலேயே ஊழலை ஒழிக்க முடியும் என்றார். அதன் பின்னர் ஊழற்ற பாரதம், வளர்ந்த தேசம், ஊழல் ஒழிப்பு, சிக்கனமும் சிறுசேமிப்பும் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி, முதல்வர் மணிமலர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் சுரேஷ், லஞ்ச ஒழிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

    • பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
    • வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், மத்திய அரசின் கோயம்புத்தூர் மத்திய தொழிலாளர் கல்வி மண்டல அலுவலக அலுவலர் எஸ். சேரன், வெள்ளகோவில் பகுதியில் உள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களான பென்ஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு, வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    இந்த பயிற்சி இன்று 12ந்தேதி, நாளை மறுநாள் 14 ந்தேதி, மற்றும் 17ந்தேதி ஆகிய தேதிகளில் 4 வகுப்புகளாக நடைபெற உள்ளது.இந்த விழிப்புணர்வு பயிற்சியானது ஒவ்வொரு வகுப்பிலும் 25 உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை, பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

    • பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
    • வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலைக்கல்லூரி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்டவற்றில் நடைபெற்றது.

    பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்(அல்பெண்டசோல்) பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா். இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நலக் கல்வியாளா் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், அரசு கல்லூரி முதல்வா் நளதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் புனிதவதி(மகளிா்), ஆனந்தன்(ஆண்கள்), மருத்துவா்கள் ஜெயப்பிரியா, யசோதா, சண்முகப்பிரியா, கீதா, யாகசுந்தரம், வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் செப்டம்பா் 16ந்தேதி வரை அவிநாசி வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி முதல் பிளஸ்2 வரை உள்ள 131 பள்ளிகளை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

    ×