search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத்திரைகள்"

    • ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்குவிற்கு இருவர் பலியானதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நல வழித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் கூறியதாவது;-

    காரைக்கால் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 80 நபர்களுக்கு டெங்கு கண்டறிய ப்பட்டுள்ளது. இதில் சுமார் 32 நபர்கள் அண்டை மாநி லங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 நபர்கள். இந்த மாதம் இன்றுவரை 6 நபர்கள் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் 4 நபர்கள் என்று மொத்தம் 10 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் குணமாக்கி விடலாம். காலம் கடத்துவதும் சுயமாக மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். கொசு ஒழிப்பு பணியிலும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி மாணவிகளுக்கு மாத்திரைகளை கொடுத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), டாக்டர் நமச்சிவாயம் (அறந்தாங்கி), தலைமையாசிரியர் சுசரிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லி முருகன், முருகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சாம் ஜேஷுரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த பரிசோதனைகள், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இயற்கை உணவு தானியங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
    • கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

    உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆங்கில, தமிழ் படிப்பு திறன்களை ஒவ்வொரு மாணவரையும் வாசிக்க சொல்லி கேட்டறிந்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளதா?

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளனவா எனவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்களா எனவும, பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடி சரியான, முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே இருந்து பயிலும் மாணவர்களிடம் ஆங்கில படிப்பு திறனையும், மற்றும் தமிழ் படிப்புத் திறனையும் வாசிக்க சொல்லி ஒவ்வொரு மாணவரையும் கேட்டறிந்தார்.

    பின்னர், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பாபு, சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.
    • முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள நம்பிக்கை மனநல காப்பகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

    மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.

    மேலும், மனநல மருத்துவர் வருகை, மனநல மருத்துவ சிகிச்சை, காப்பகத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, குடிநீர், தங்குமிடம், சமையல் செய்யும் இடம், கழிவறைகள் ஆகியவற்றை பார்த்து சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.

    மேலும், நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.

    மேலும், காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, செவிலியர் சுதா, பயிற்சி அளிக்கும் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர்களிடம் இவர்களை விரைவில் குணமாக்கும் விதம்நம்மிடம் தான் உள்ளது என்பதை நினை வில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-

    கலெக்டர் நேரில் வந்து காப்பகத்தை பார்வையிட்டு எங்களுடன் கலந்து பேசியது, நாங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை, ஆலோசனைகள் வழங்கியது எங்களது பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என உத்வேகம் அளிக்கிறது என்றார்.

    ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தாசில்தார் மலர்க்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 90 சதவீத நோய்களை நம் உடலே சரிசெய்துவிடும்.
    • மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்

    மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சாதாரணமாக காய்ச்சலுக்காக வழங்கப்படும் மாத்திரைகள் உடலில் ப்ராஸ்டாகேண்டின் என்ற திரவ வேதிப் பொருளை கட்டுப்படுத்தி வேலை செய்யும்.

    அந்த திரவ சுரப்பை பொறுத்துதான் காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்துவதுதான் பாராசிட்டமால் மாத்திரை. ஒருவரின் உடல் எடையை பொறுத்து மருந்தின் அளவு மாறுபடும்.

    அதிகமாக எடுத்துக் கொண்டால் விஷமாகி விடும். குறைவாக எடுத்துக் கொண்டால் வேலை செயாது. அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் வயிறு புண்ணாகிவிடும். அடுத்ததாக கல்லீரலை பாதிக்கும்.

    உரிய அளவில் பாராசிட் டமால் மாத்திரையை கூட ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 முறைதான் எடுத்துக் கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக சாப்பிட்டால் கல்லீரலை பாதிக்கும். இணை நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளுடன் பாராசிட்டமாலை சரியான டோசில் கொடுக்காவிட்டால் மாத்திரைகளின் வேதியியல் மாறுபாட்டால் மருந்துகளின் வேகம் மாறும்.

    சாதாரணமாக ஜூரம், தலைவலி என்றாலே மாத்திரையை தேடக் கூடாது. உடலில் நீர் சத்து குறைவதால் காய்ச்சல் வரும். பயணம் செய்யும் போதோ, அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போதோ நீர் சத்து குறைந்து உடல் சூடாகி, சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் போல்தான் இருக்கும்.

    இதற்கும் நாமே பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் பாதிக்கும். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாக கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரலுக்கும், கிட்னிக்கும் நாமே ஆபத்தை தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

    உடலில் கிருமித்தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல் தான் வரும். எனவே காய்ச்சல் எதனால் வந்திருக்கிறது என்பதை அறிந்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

    பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு இருந்தால் முதலில் நீர்சத்து நிறைந்த ஏதாவது உணவை எடுத்துக்கொண்டு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் சரியாகாவிட்டால் பாராசிட்டமாலை தேடலாம்.

    90 சதவீத நோய்களை நம் உடலே சரிசெய்துவிடும். இல்லாத நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் மிகப்பெரிய பின் விளைவுகள் வரும்.

    ஆன்டிபயாடிக் என்பதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் என்ன 'இன்பெக்சன்' என்பது தெரியாமல் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் ரத்தத்தில் கலந்து நோயை உருவாக்கிய வைரசை விழிப் படையச்செய்துவிடும். இதனால் அதிக சக்தியுடன் உருமாறி அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    • சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    • மருந்தகங்களுக்கு திடீர் எச்சரிக்கை
    • கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாட்டுத்துறை) குருபாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவர்கள் டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் விற்க வேண்டும்.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருந்தகங்கள் விற்கக் கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருந்தகங்களில் டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் அனைவருக்கும் மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஜெயகண்ணன், செயலாளர் ராம்குமார், முத்துராமலிங்க குமார், உறுப்பினர்கள் லட்சுமணன், சுப்புராம், பொருளாளர் ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். அனைவருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை ஊராட்சி புதுக்குடி கிராமத்தில் நிலவள, நீர்வளத்திட்ட கால்நடை சிறப்பு முகாம் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமை கும்பகோணம் கால்நடை கோட்ட்ட உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் துவக்கி வைத்தார்.

    முகாமில், கணபதி அக்ரஹாரம் கால்நடை மருத்துவர் சங்கமித்ரா, திருவைகாவூர் கால்நடை உதவி மருத்துவர் அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஆய்வு, குடல் புழுநீக்கம் மலடு நீக்கம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் காயத்திரி கேசவன், ஊராட்சி உறுப்பினர் ராதிகா பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
    • வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலைக்கல்லூரி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்டவற்றில் நடைபெற்றது.

    பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்(அல்பெண்டசோல்) பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா். இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நலக் கல்வியாளா் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், அரசு கல்லூரி முதல்வா் நளதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் புனிதவதி(மகளிா்), ஆனந்தன்(ஆண்கள்), மருத்துவா்கள் ஜெயப்பிரியா, யசோதா, சண்முகப்பிரியா, கீதா, யாகசுந்தரம், வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் செப்டம்பா் 16ந்தேதி வரை அவிநாசி வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி முதல் பிளஸ்2 வரை உள்ள 131 பள்ளிகளை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

    ×