search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prescription"

    • மருந்து சீட்டில் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை என கூறப்பட்டு வந்தது
    • ஒடிசா உயர் நீதிமன்றம் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது

    மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை "கேப்பிட்டல் எழுத்துகள்" (CAPITAL LETTERS) எனும் "பெரிய" ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், மருந்தாளுனர்களும் (pharmacists) கூறி வந்தனர்.

    எடுத்துக் காட்டாக, செலின் (வைட்டமின் சி) மற்றும் செலிப் (மூட்டு அழற்சிக்கான மருந்து), மாலாக்வின் (மலேரியாவிற்கான மருந்து) மற்றும் மாஹாக்வின் (ஆன்டிபயாடிக்), அசூ (ஆன்டிபயாடிக்) மற்றும் அசாக்ஸ் (மனநலம்) போன்ற பல மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்து போவதால், மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதி தரும் போது மருந்தாளுனர்களால் அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

    இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்டதால் ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேர்ந்த சம்பவங்கள் நடைபெற்றது.

    கடந்த சில வருடங்களாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது.

    இதன் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசும் ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, "கேப்பிட்டல்" எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த செயல் சில நிமிடங்கள் மட்டுமே அதிகம் எடுக்கும் என்றும் இதன் மூலம் சரியான மருந்தை நோயாளிகள் எடுத்து கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் மருத்துவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

    • மருந்தகங்களுக்கு திடீர் எச்சரிக்கை
    • கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாட்டுத்துறை) குருபாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவர்கள் டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் விற்க வேண்டும்.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருந்தகங்கள் விற்கக் கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருந்தகங்களில் டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  

    டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டுமே மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Prescription #DoctorPrescription

    திருச்சி:

    திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே.மனோகரன் வரவேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், சில்லரை மருந்து வணிகர்கள் வலி நிவாரணி, தூக்க மாத்திரை, மனநல மருத்துவ மாத்திரைகள், கொடின் சல்பேட் கலந்த இருமல் மருந்துகள் அனைத்தும் ஷெட்டியூல்ட் எச், எச்-1-ல் வருவதால் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டும் மருந்து கொடுக்க வேண்டும்.

    அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து மருந்தாளுனர் கையெழுத்திட்டு சரியாக வைத்திருக்க வேண்டுமென கூறினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் பேசும்போது, காசநோய் மருந்து விற்பனை செய்பவர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்த விவரங்களை அதற்கான படிவங்களில் பூர்த்தி செய்து மாதந்தோறும் மாவட்ட காசநோய் இயக்குனருக்கு அனுப்புவதுடன் அதன்நகலை சரக மருந்து ஆய்வாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்,

    மருந்து உரிமங்கள் கோரும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையம் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் கிருபானந்தமூர்த்தி மற்றும் மீனாட்சி சேகர், கே.டி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கூட்டத்தில் செயலாளர் பாஸ்கரன், அண்ணாமலை, மூர்த்தி, மீனாட்சி சேகர், பெரியசாமி, சண்முகவடி வேல் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள், மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மற்றும் ஆய்வளர்கள் கலந்து கொண்டனர். #Prescription #DoctorPrescription

    ×