search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கழிவறை தினம்"

    • உசிலம்பட்டி அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலாளர் மகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவினாசி:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு அவிநாசி முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க கழிவறைகளை பயன்படுத்திய பிறகு சோப்பு கொண்டு கை கழுவதுதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனி நபா் கழிப்பிடம் அமைக்க ரூ. 8,000 மானியம் வழங்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×