என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் ஜே.எஸ்.எஸ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதன்மை அலுவலர் பசவண்ணா முன்னிலையில் கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியவாறு, துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருந்தியல் சங்க நீலகிரி தலைவர் பேராசிரியர் வடிவேலன், செயலாளர் கணேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். பேரணியில் கவுதமராஜன், பாபு, மெய்யநாதன், காளிராஜன், பிரவின் உள்ளிட்ட பேரசிரியர்கள், மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story