search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனப்பதிவு"

    • வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், பல்லடம் அரிமா சங்கம்,கோல்டன் வீல்ஸ், ஈரோடு பினீக்ஸ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஆகியோர் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகள் வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலாதேவி, பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, அரிமா சங்கத் தலைவர் நடராஜன், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா தேவி ,மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்து விளக்கி பேசினார்.பின்னர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு குறித்த வாகன ஊர்வலம் நடைபெற்றது.

    ×