search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti corruption"

    • அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
    • ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    திருப்பூர்,அக். 26-

    கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

    அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக குற்றச்சாட்டு.
    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மாநில விஜிலென்ஸ் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சண்டிகரில் கைது செய்யப்பட்டா சோனியை, பின்னர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று உத்தரவிடப்பட்டது.

    2006ம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த காலகட்டத்தில், ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளார்.

    விசாரணையைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விஜிலன்ஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • ஊழலற்ற பாரதம் - வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து ஊழலற்ற பாரதம்- வளர்ந்த தேசம் என்ற முழக்கத்தோடு ஊழல் ஒழிப்பு வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சுரேந்திர கெளங்கர் பேசுகையில், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தனிமனித மாற்றமும், சமூக மாற்றமும் மிக முக்கியமானது. பொது நலம் சார்ந்த சிந்தனை உடையவர்களாலேயே ஊழலை ஒழிக்க முடியும் என்றார். அதன் பின்னர் ஊழற்ற பாரதம், வளர்ந்த தேசம், ஊழல் ஒழிப்பு, சிக்கனமும் சிறுசேமிப்பும் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதி, முதல்வர் மணிமலர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் சுரேஷ், லஞ்ச ஒழிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

    • உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
    • சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.

    உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியே சென்று அரசு தலைமை மருத்துவ–மனை வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ் (பொது), தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.
    • பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்புவதற்கு மக்களை அனுமதிக்கும் ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

    இதையடுத்து, ஊழலுக்கு எதிரான புகார்களை பஞ்சாப் விஜிலென்ஸ் ஆய்வு செய்கிறது.

    அதன்படி, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தினமும் 2500 புகார்கள் பெறப்படுவதாக பஞ்சாப்பை ஆளும் ஆம் த்மி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், எங்கள் கனவு-- ஊழல் இல்லாத பஞ்சாப் என்று குறிப்பிட்டிருந்தது.

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் குறித்த விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி இன்று ஆஜரானார். #Pugazhendi
    பெங்களூரு:

    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறை துறை சூப்பிரண்டாக இருந்த ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. சசிகலாவுக்கு சிறையில் சலுகை செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த குழு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    சலுகை செய்ய லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படைதான் விசாரணை நடத்த வேண்டும் என்று வினய்குமார் கூறி இருந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூபா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வு பெற்ற சிறை துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ், புகார் கொடுத்த ரூபா மற்றும் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோருடன் விசாரணை நடத்தினர்.

    சிறையில் சசிகலாவுக்கு சலுகை செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் வெளியான தகவலால் மீண்டும் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

    இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி நேரில் ஆஜரானார். அவரிடம் ஊழல் தடுப்பு படை துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Pugazhendi

    ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #NajibRazak #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

    அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

    கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும். 

    மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Malaysia #NajibRazak
    ×