search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assault"

    • நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
    • பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுடன் அவரது தாயார் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை. மேலும் அவருடன் தங்கி இருந்த அவரது தாயாரையும் 2 வயது குழந்தையையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் குழந்தையை காணவில்லை என்று கூச்சலிட்டார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்று எண்ணி கொண்டு விசாரித்தனர்.ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த குழந்தைகளை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பொதுமக்களிடமிருந்து இருந்து விடுவித்து அனுப்பி வைத்தனர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்திய சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. வேலவன் தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர் விஜய், தலைவர் சந்திரசேகர், பொருளாளர் அருண், நிர்வாகிகள் ஜெயராஜ், ஜோதிபாசு, தினேஷ், சிவகுரு, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்்.

    அதில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பணிக்கண்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன், மைக்கேல்லூர்து சாமி இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்குள் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை ராயப்பன் மகன் லூர்து மரிய ரீகன் (வயது 18). கல்லூரி மாணவர். பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்று ள்ளார். அங்கு இவரது வீட்டிலிருந்த குடிநீர் குழாயை மைக்கேல்லூர்து சாமி மற்றும் அவரது மகன்கள் சேதப்படு த்தியதாக கூறப்படுகிறது.

    இதனை ரீகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த ரீகன் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் கருப்பசாமி(22). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற கருப்பசாமியை வழிமறித்து 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் அவரை அவதூறாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து செல்லூர் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 17 வயது சிறுவன், அய்யனார்(20), காளிதாஸ், சித்திரைச் செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஹரிஸ், குரேநாதனை தேடி வருகின்றனர்.

    • குறுவை சாகுபடிக்காக தண்ணீர் வருவதையொட்டி மரத்தை அகற்ற வேண்டும்.
    • மரத்தை அகற்றக்கூடாது எனக்கூறி தகராறு செய்து குமாரை தாக்கியுள்ளனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில், சாக்கோட்டை, அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (58). இவர் சாக்கோட்டை உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாசன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்தாண்டு சாக்கோட்டை அரசலாற்றின் கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் கீழே விழுந்து இருந்தது. இந்நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் வருவதையொட்டி அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி உத்தரவிட்டதையடுத்து, அரசு ஊழியரான குமார், சில தொழிலாளர்களைக் கொண்டு அந்த மரத்தை அகற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் இந்த மரத்தை அகற்றக்கூடாது என கூறி தகராறு செய்து, குமாரை தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த குமார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் உள்ளே புகுந்து அரசு அலுவலரே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • செல்வமணி வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம்.
    • சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி பகுதியைச்சேர்ந்தவர் செல்வமணி (வயது24). இவர் கொத்தனராக வேலை செய்து வருகிறார். வேலை இல்லாத நேரத்தில், நண்பர் ராம்கியுடன் (23) சென்று வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம். சம்பவத்தன்று செல்வமணி, ராம்கியுடன் வயல்களில் நண்டு பிடிக்க சென்றார். திருவேட்டக்குடி காலணித்தெரு அருகே உள்ள கோழிக்கடை வாசலில், திருவேட்டக்குடி மெயின்ரோட்டைச்சேர்ந்த சங்கரலிங்கம் (36), இருவரையும் வழிமறித்து, உன்னிடம் சித்தாள் வேலைக்கு வரும் நபர்களை எல்லா வேலையும் செய்யச்சொல்வியா என கேட்டு, ஆபாசமாக திட்டி, சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    • மீனவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.

    தொண்டி

    தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம்- கண்கொள்ளான் கடலோர கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்(40). மீனவ சங்க செயலாளரான இவர் சம்பவத்தன்று நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    அப்போது மகாசக்திபுரத்தை சேர்ந்த சில மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி முத்துசெல்வத்தை தாக்கியதாக தெரிகிறது. படுகாயமடைந்த அவர் திருவாடனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவத்தால் 2 மீனவ கிராமங்கள் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.

    • 2 வாலிபர்கள் தாக்கினார்கள்.
    • அசோகனை போலீசார் தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் அருகே முறுக்கேரியில் வைத்திய நாதன் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த மாதம் 26-ந்தேதி கந்தாடு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாக்கினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 28), அசோகன் (26) ஆகியோர் சம்பவத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதில் சம்பவத்தன்றே ஜீவாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அரக்கோணத்தை சேர்ந்த அசோகனை போலீ சார் தேடி வந்தனர்.

    இவர் நேற்று நண்பகலில் பிரம்மதேசம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றதை போலீசார் பார்த்தனர். அவரை பின்தொடர்ந்த போலீசார், மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து அசோகனை கைது செய்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அசோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
    • நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
    • 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்  .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்   ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்  இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ்  குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.

    குப்பாண்டபாளையம்  பஸ் நிறுத்தம் அருகே  ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம்  (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.

     பின்னர் சுந்தரம்  அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். 

    இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை. 

    இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம்  அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
    ×