என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் கோட்டுச்சேரியில் நண்டு பிடிக்க சென்ற 2 பேர் மீது தாக்குதல்
    X

    காரைக்கால் கோட்டுச்சேரியில் நண்டு பிடிக்க சென்ற 2 பேர் மீது தாக்குதல்

    • செல்வமணி வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம்.
    • சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி பகுதியைச்சேர்ந்தவர் செல்வமணி (வயது24). இவர் கொத்தனராக வேலை செய்து வருகிறார். வேலை இல்லாத நேரத்தில், நண்பர் ராம்கியுடன் (23) சென்று வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம். சம்பவத்தன்று செல்வமணி, ராம்கியுடன் வயல்களில் நண்டு பிடிக்க சென்றார். திருவேட்டக்குடி காலணித்தெரு அருகே உள்ள கோழிக்கடை வாசலில், திருவேட்டக்குடி மெயின்ரோட்டைச்சேர்ந்த சங்கரலிங்கம் (36), இருவரையும் வழிமறித்து, உன்னிடம் சித்தாள் வேலைக்கு வரும் நபர்களை எல்லா வேலையும் செய்யச்சொல்வியா என கேட்டு, ஆபாசமாக திட்டி, சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×