search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anointing"

    • அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.

    பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.

    • மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வைகையாற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான மூலிகை பொருள்கள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆனந்தவல்லி சோமநாதரை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மேலெநெட்டூரில் கும்பாபிஷேகம் செய்யபட்டு புதுபிக்கப்பட்ட சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் இங்கு உள்ள சிம்ம வாகனத்தில் காட்சி தரும் புதன் பகவானையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    • காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 37-வது ஆண்டாக சித்திரைத் திருவிழாவை தீயாடியப்பர் பஸ் நிலைய டாக்ஸி, டூரிஸ்ட் வேன், மினி வேன், ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் இணைந்து நடத்தினார்கள்.

    திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் நாக்கில் உடல் முழுவதும் அலகு குத்தி கொண்டு, ஆட்ட காவடி, பறவை காவடி எடுத்து திருக்காட்டுப்பள்ளி வீதிகளின் வழியாக சிறப்பு கிராமிய இசையுடன் ஊர்வலமாக வந்து தெண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடைந்தனர்.

    அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மாலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
    • சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று கேது பகவானுக்கு பால்,பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர்,மஞ்சள்,சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராகுதோஷம், கேதுதோஷம், நாகதோஷம், திருமணதடை உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் வழங்கப்படும் வெள்ளியிலான நாகத்திற்கு அபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்தனர். இதற்கனா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூரில் பழமைவாய்ந்த ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா பூச்சொரிதலுடல் துவங்கியது.

    அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உத்திராபதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமுதுபடையில் பெருவிழா நேற்று நடைபெற்றது.

    அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல் செய்து அன்னம் படைக்கப்பட்டது.

    முன்னதாக பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து உத்திராபதிஸ்வரர் கோவில் வந்தடைந்தனர்.

    பின்னர் உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர், திரவிய பொடி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அன்னதானம் நிகழ்ச்சியின் போது சிவன் பார்வதி சிறு தொண்டர் வெங்கட்நங்கை சந்தன நங்கை சீராளன் முருகன் போன்ற புராண கதைகளின் வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.

    பின்பு மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு சுவாமி வீதியுள்ள காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் துரைராஜன் , சிவா, பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் கோவில் மண்டல அபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூரபட்டர் தலைமையில் யாகபூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், காடுபட்டி திரவுபதி அம்மன் கோவில் பூசாரி பாலு, முதலியார் கோட்டை கிராமத்தலைவர் ஜெயக்கொடி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
    • குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

    திருமண தடை போக்குவது, குழந்தை பாக்கியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் அமாவா சையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கரூர்:

    புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
    • பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளை யம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம் மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் பங்குனி மாத பவுர்ண மியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • வண்ண மலர்களை ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜலாம்பிகை உடனுறைஅட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பங்குனித்திருவிழா பூச்சொரிதல் விழா தொடங்கியது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக ஆலய உட்பிரகாரத்தை மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பலிபீடம் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் பொடி பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    • பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
    • அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக வரலாறுகள் கூறுகின்றன.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.

    வைணவ பெரியார்களில் முக்கியமானவராக கருதப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.

    மேலும் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.

    ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

    திருமண தோஷம் இருப்பவர்கள் இங்கு மாலை மாற்றி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதனை ஒட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பின்னர் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரி யார்கள் கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அன்பரசன், திருவிழா கமிட்டி செயலாளர் ரகுநாதன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    ×