search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் மண்டல அபிஷேகம்
    X

    கோவில் மண்டல அபிஷேகம்

    • சோழவந்தான் கோவில் மண்டல அபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூரபட்டர் தலைமையில் யாகபூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், காடுபட்டி திரவுபதி அம்மன் கோவில் பூசாரி பாலு, முதலியார் கோட்டை கிராமத்தலைவர் ஜெயக்கொடி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×