search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவிலில் அமுதுபடையல் பெருவிழா
    X

    அமுதுபடையல் பெருவிழா நடந்தது.

    அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவிலில் அமுதுபடையல் பெருவிழா

    • உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உத்திராபதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமுதுபடையில் பெருவிழா நேற்று நடைபெற்றது.

    அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல் செய்து அன்னம் படைக்கப்பட்டது.

    முன்னதாக பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி எடுத்து உத்திராபதிஸ்வரர் கோவில் வந்தடைந்தனர்.

    பின்னர் உத்திராபதிஸ்வருக்கு பால், தயிர், திரவிய பொடி, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அன்னதானம் நிகழ்ச்சியின் போது சிவன் பார்வதி சிறு தொண்டர் வெங்கட்நங்கை சந்தன நங்கை சீராளன் முருகன் போன்ற புராண கதைகளின் வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.

    பின்பு மாலை உத்திராபதிஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு சுவாமி வீதியுள்ள காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் துரைராஜன் , சிவா, பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×