search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
    X

    சிறப்பு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகன்.

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

    • அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.

    பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.

    Next Story
    ×