search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshay Kumar"

    • அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’.
    • மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான 'சாம்ராட் பிருத்விராஜ்' தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜூன் 3-ந் தேதி வெளியானது. சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

    இப்படத்தில் அக்‌ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடித்துள்ளார், அதே சமயம் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மனுஷி சில்லர் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட் மற்றும் மானவ் விஜ், அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


    சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர்

    சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர்

    மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு அளித்தது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ 55.05 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் படத்திற்கான டிக்கெட்டுகள் சரியாக விற்பனை ஆகாததால் படம் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் வெளியான 'தாகத்' திரைப்படம் வெளியான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
    தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தவர் அக்‌ஷய்குமார். இவர் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி' இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் முன்னால் ஏராளமான விவசாயிகள் திரண்டு அக்‌ஷய்குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷம் எழுப்பினர். சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். தியேட்டர் அலுவலகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். 

    அக்‌ஷய் குமார்

    சூர்யவன்ஷி படம் திரையிடப்படுவதை எதிர்த்து பஞ்சாப்பில் உள்ள உதம் சிங் பூங்காவில் இருந்து திரையரங்கம் வரை கண்டன ஊர்வலத்தையும் விவசாயிகள் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்‌ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்கள் முன்னால் திரண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
    லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்சுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

    தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.


    படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது.

    படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #AkshayKumar
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி அளித்தார்.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர், “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை நாடுவதுபோல தெரிகிறது. அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர். நம் அனைவருக்கும் அவரை பிடிக்கும். தோற்றுப்போன அரசியல்வாதி, அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகர் ஆக முயற்சிக்கிறார்” என கூறினார்.  #RahulGandhi #PMModi #AkshayKumar

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-‌ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.

    தற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.



    படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    அந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    ‘இந்தியன் 2’ படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தில் இளைஞர் படை மூலம் கமல்ஹாசன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Arya
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக படக்குழுவினர் தெரிவித்த கருத்து:- ‘இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.



    முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து இளைஞர்கள் படையை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆர்யாவிடம் பேசி உள்ளோம்.

    படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம். வில்லனாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது”

    இவ்வாறு கூறினர்.

    கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் இணைந்து ‘இந்தியன் 2’ படத்துக்கான வசனங்களை எழுதி உள்ளனர். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Siddharth #Arya 

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு தைவான் செல்லவிருக்கிறது. #Indian2 #KamalHaasan #Siddharth
    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

    படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக கூறுகிறார்கள்.



    காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் படக்குழுவில் இணைந்திருக்கிறார்கள். அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகளுக்காக படக்குழு தைவான் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #Siddharth #KajalAggarwal

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் கமலுடன் இணைகிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் படத்தில் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh

    காஞ்சனா 3 படத்தை இயக்கி இருக்கும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #RaghavaLawrence #Kanchana
    ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துவரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). இந்த படத்தில் வேதிகா மற்றும் ஓவியா கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப்பட்டு வருகிறது.



    இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் முதன் முதலாக இந்தியில் கால்பதிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar
    ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 

    கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாகவும், சித்தார்த் ஜோடியாக காஜல் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அத்துடன் வில்லனாக அபிஷேக் பச்சனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அக்‌ஷய் குமார் சில நிபந்தனைகளை விதிக்க, அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AbhishekBachchan 

    2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar
    22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
     
    படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.



    வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள். 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வசூல் பார்த்த நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து அக்‌ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட தயாராகி வருகிறார்கள். #PrakashRaj #Mohanlal #AkshayKumar
    இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.

    இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

    வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால், திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.



    ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.
    ×