என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Akshay Kumar"
- அக்ஷய் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’.
- மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான 'சாம்ராட் பிருத்விராஜ்' தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜூன் 3-ந் தேதி வெளியானது. சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படத்தில் அக்ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடித்துள்ளார், அதே சமயம் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மனுஷி சில்லர் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட் மற்றும் மானவ் விஜ், அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு அளித்தது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் உருவான 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ 55.05 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் படத்திற்கான டிக்கெட்டுகள் சரியாக விற்பனை ஆகாததால் படம் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் வெளியான 'தாகத்' திரைப்படம் வெளியான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Bringing you one bomb of a story,#LaxmmiBomb starring @Advani_Kiara & yours truly!Bursting in cinemas on 5th June,2020💥
— Akshay Kumar (@akshaykumar) May 18, 2019
Fox Star Studios Presents
A Cape of Good Films Production in association with Shabinaa Entertainment & Tusshar Entertainment House
Directed by Raghava Lawrence pic.twitter.com/vlXyK4HkNE
பிரதமர் மோடி நடிகர் அக்ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி அளித்தார்.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை நாடுவதுபோல தெரிகிறது. அக்ஷய் குமார் சிறந்த நடிகர். நம் அனைவருக்கும் அவரை பிடிக்கும். தோற்றுப்போன அரசியல்வாதி, அக்ஷய் குமாரை விட சிறந்த நடிகர் ஆக முயற்சிக்கிறார்” என கூறினார். #RahulGandhi #PMModi #AkshayKumar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்