search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mocks"

    “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #AkshayKumar
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனம் திறந்த பேட்டி அளித்தார்.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர், “அனைவருக்கும் யதார்த்தம் தெரிகிறபோது, எந்த நடிப்பும் உதவாது. மக்களை ஏமாற்ற முடியாது என்பதை காவலாளி உணர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் திரைப்பட துறையில் மாற்று வேலை வாய்ப்பை நாடுவதுபோல தெரிகிறது. அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர். நம் அனைவருக்கும் அவரை பிடிக்கும். தோற்றுப்போன அரசியல்வாதி, அக்‌ஷய் குமாரை விட சிறந்த நடிகர் ஆக முயற்சிக்கிறார்” என கூறினார்.  #RahulGandhi #PMModi #AkshayKumar

    10 நாளில் விவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதில் அளித்தார்.

    அவர் கூறியதாவது:- ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை ராகுல் கூறுகிறார். பகுதி அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால்கூட வளர்ச்சி பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும். ஒரு விஷயம் குறித்த ஞானம் இல்லாதவர்கள்தான், இதுபோன்ற மலிவான விளம்பரம் தேடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    ×