search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி"

    சேலத்தில் ஓட்டல் காவலாளி திடீரென மயங்கி விழுந்து பலியானார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது50). இவர் நெய்காரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அவர் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×