search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajit Pawar"

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.
    • பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் இரு அணியினரும் நேற்று தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி கூட்டம் நடத்தினர்.

    மும்பை பாந்திராவில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

    இந்தநிலையில் கூட்டத்தில் சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அஜித்பவார் பேசியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் அவரவர் இன்னிங்ஸ் இருக்கிறது. அதிக உழைக்கும் திறன் கொண்ட வயது 25 முதல் 75 வரை ஆகும்.

    2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு சரத்பவார் தான் காரணம். அந்த ஆண்டு காங்கிரசை விட தேசியவாத காங்கிரசிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். எங்களை பொறுத்தவரை சரத்பவார் கடவுளை போன்றவர். அவர் மீது எங்களுக்கு ஆழமான மரியாதை உள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் கூட பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம்.

    உங்களுக்கு (சரத்பவார்) தற்போது வயது 83, நீங்கள் நிறுத்தப் போவதில்லையா? எங்களுக்கு உங்களின் ஆசியை வழங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அஜித்பவார் கூறினார்.

    அஜித்பவாருக்கு 63 வயது ஆகிறது. இவர் சரத்பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பிரபுல் பட்டேலை சரத் பவார் கட்சியில் இருந்து நீக்கினார்.
    • இதேபோல், அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

    புதுடெல்லி:

    எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார்.

    அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தனர். இந்தக் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடந்தது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்துள்ளார்.

    இதேபோல், சரத் பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    • சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று களத்தில் இறங்குகின்றனர்.
    • அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

    தங்களுக்கு 40 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

    அஜித்பவாருக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல். ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே துரோகம் செய்தவர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

    தெற்கு மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட அஜித்பவார் அணியின் புதிய அலுவலகத்தில் சரத்பவாரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

    அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் நேற்று பதவியேற்றார்.
    • இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம்.

    அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது.

    அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார்.
    • அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

     தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும்.

    அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது.

    ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார்.
    • அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்மந்திரியாக பதவியேற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவீட் செய்துள்ளார். அதில்,

    மகாராஷ்டிர அரசியலை சுத்தப்படுத்தும் பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை உடைக்கிறது. அவர்கள் ஆட்சியை உருவாக்குகிறார்கள், உடைக்கிறார்கள். பிரதமர் மோடியால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இன்று பதவியேற்றனர். அதாவது அந்தக் கூற்றுகள் தவறானவை அல்லது பாஜக ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்க்கிறது என தெரிவித்தார்.

    • கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது.
    • மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை, கட்சி பணியாற்ற விரும்புவதாக கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவிக்கு அவர் அடிபோடுவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சகன் புஜ்பாலும் தனது பங்கிற்கு களத்தில் குதித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன் புஜ்பால் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பிரிவு தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நானும் மாநில பிரிவு தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் சுனில் தத்காரே, ஜிதேந்திர அவாத், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட பல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.

    கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது. எனவே மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம். இதில் தவறு எதுவும் இல்லை.

    மராட்டிய மக்கள் தொகையில் 54 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே கட்சியின் மாநில தலைவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் அவர்களை சென்றடைவது எளிதாக இருக்கும்.

    தற்போது கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். பா.ஜனதாவின் மாநில தலைவர்கள் சந்திரசேகர் பவன்குலே மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நானா படோலே ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.

    கட்சி விதிகளின் படி கட்சியின் மாநில பிரிவு தலைவர் ஒரு ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி சிறிய சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநில பிரிவு தலைவராக இருந்தவர் சகன் புஜ்பால் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய செயல் தலைவர் பதவி சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது.
    • செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பதவி சமீபத்தில் கட்சி தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கட்சியின் நிறுவன தின நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அஜித்பவார் "எனக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி பணி செய்யவே விரும்புகிறேன்" என்று பேசினார்.

    இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    கட்சியில் உள்ள அதிகமான தலைவர்கள் தங்களை கட்சி பணியில் ஈடுபடுத்தி கொள்வது நல்லதுதான். கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சி அமைப்பில் பணியாற்றியவர்கள். அஜித்பவார் கட்சிபணி ஆற்றுவதாக தெரிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சேவை, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இலக்குகள் ஆகும். ஒரு சகோதரியாக, எனது சகோதரர் அஜித்பவாரின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் நிருபர்கள் அஜித்பவாருக்கு கட்சியில் மாநில அளவில் பதவி வழங்கப்படும் என்று வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இது கட்சியின் உள் விவகாரம்" என்றார்.

    அதேபோல கடந்த ஆண்டு சிவசேனாவில் அதிருப்தி அணி முயற்சி தோல்வி அடைந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பார் என்று தீபக் கேசர்கர் கூறியது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், "அவர் (தீபக் கேசர்க்கர்) பேசுவது உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.

    • அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
    • அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.

    மும்பை :

    தேசியவாத காங்கிரசில் சுப்ரியா சுலேக்கு தேசிய செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை. இதற்கு அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.

    இதுபற்றி மும்பையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அளித்த சுப்ரியா சுலே எம்.பி., "யார்- யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது எங்களது உள்கட்சி விவகாரம்.

    அஜித்பவார் மாநில அரசியலின் அமிதாப் பச்சன் போன்றவர். அஜித்பவார் செல்லும் இடங்களில் ஆட்டோகிராப் வாங்கவும், செல்பி எடுக்கவும் பலர் விரும்புகிறார்கள் " என்று குறிப்பிட்டார்.

    • 1999-ம் ஆண்டு சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
    • அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

    1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார்.

    அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.

    காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.

    இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.

    ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார்.

    அப்போது அவர், "சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை. 4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், "நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்" என்றார்.

    தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.

    2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

    இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.

    சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார். அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.

    • காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது.
    • உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும்.

    புனே :

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    என்னை பற்றி பல தகவல்களும், வதந்திகளும் பரவி வருகிறது. காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் நான் எனது வேலையை தொடர்ந்து வருகிறேன்.

    உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் நடந்ததை (பட்னாவிசுடன் துணை முதல்-மந்திரி ஏற்ற சம்பவம்) மீண்டும் நான் செய்வேனா என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்து இருக்கும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். கடைசி மூச்சு உள்ளவரை தேசியவாத காங்கிரசுக்காக தான் உழைப்பேன் என்பதை கூறிவிட்டேன். கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் நலம், வளர்ச்சிக்காக உழைப்பது தான் எங்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே தாராசிவ் மாவட்டத்தில் கிராஸ்ரோடு பகுதியில் அஜித்பவார் வருங்கால முதல்-மந்திரி என புகழ்ந்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×