search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிர அரசியல்"

    • தேசியவாத கட்சிகள் பிளவுப்பட்டதாக எழுத்துப்பூர்வ தகவல் வரவில்லை
    • தேசியவாத கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டசபையில் அப்படியே இருக்கிறது

    மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுக்குத்தான் என இருவரும் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால், பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும். மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ் இருந்து வருகிறது. தற்போது தன்பக்கம் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என அஜித் பவார் கூறியுள்ளதால் அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக கருதப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? என்பது குறித்து நான் இன்னும் உறுதி செய்யவில்லை. எனக்கு முன்னால் இருக்கும் விவரங்களை பார்த்துவிட்டு, அதுகுறித்து முடிவு எடுப்பேன்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயந்த் பாட்டீலிடம் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு மனுவை மட்டுமே நான் பெற்றுள்ளேன். எழுத்துப்பூர்வமாக மற்ற தலைவர்களிடம் இருந்து தகவல் பெறப்படவில்லை. கட்சி பிளவுப்பட்டதாக எந்தவொரு தகவலும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

    அஜித் பவாருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதாக தகவல் வெளியாகுவது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஏனென்றால் எழுத்துப்பூர்வமாக எனக்கு வரவில்லை. கட்சி சார்பில் சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் '' என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்து எம்.எல்.ஏ.க்கள் மூலம் சபாநாயகர் அலுவலகம் கடிதங்களை பெற்றுள்ளது. சட்டப்பூர்வமாக அவற்றை ஆராய்ந்து, அதன்பின் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

    • பிரபுல் பட்டேல் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார் சரத் யாதவ்
    • சரத் யாதவ் நியமித்த ஜெயந்த் பாட்டீலை நீக்குவதாக அஜித் பவார் குழு தகவல்

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சோதனைக்குள்ளாகியுள்ளது. நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 9 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சரத் பவார் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை கொறடா, பிரபுல் பட்டேல் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதாக சரத் பவார் தெரிவித்தார். பிரபுல் பட்டேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் பவார் தலைமையில் அணி, அவர்களுக்கான குழுவை கட்டமைக்க தொடங்கியுள்ளது. சொந்த குரூப், மாநில யூனிட் தலைவர்கள், சரத் பவார் ஆதரவார்களை நீக்கும் வேலையில் இறங்கியது.

    முதன்முதலாக சரத் பவார் எதிரணி குழுவின் தலைவராக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரபுல் பட்டேல் தெரிவித்தார். அதன்பின் மாநில தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் நியமனம் செய்த ஜெயந்த் பாட்டீலை நீக்கியுள்ளது.

    குரூப் தலைவர் என்றால் கட்சியின் தேசிய தலைவர் யார்? என அஜித் பவாரிடம் கேள்வி கேட்க ''சரத் பவார் தேசிய தலைவராக இருப்பார்'' என்றார்.

    மேலும், ''கட்சியின் பெரும்பாலானோர் எடுத்த முடிவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அவருடைய வாழ்த்தை பெற விரும்புகிறோம்'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார். தற்போதைய செயலுக்கான திட்டத்தை அஜிப் பவார் தெரிவித்துள்ளார்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சட்சி சின்னம் குறித்து முடிவு செய்யும்'' என்றார்.

    மேலும், நேற்று மகாராஷ்டிர மாநில சபாநாயகரிடம் தாங்கள் நியமனம் செய்துள்ளது, நீக்கியுள்ள விவரங்களை தெரிவித்துள்ளோம். ஏற்கனவே, தலைமை கொறடாவாக இருந்த அனில் பைதாஸ் எங்களுடைய கொறடாவாக தொடர்வார். நாங்கள் என்ன நியமனம் செய்ய வேண்டுமோ, அதை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் செய்வோம்'' என்றார்.

    பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே, நரேந்திர ரதோட், விஜய் தேஷ்முக், சிவாஜி ராவ் கார்கே ஆகியோரை கட்சி பதவியில் இருந்து சரத் பவார் நீக்கி உத்தரவிட்டுள்ளார். பதவி ஏற்ற 9 பேருக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. கட்சி எங்களுடன் உள்ளது என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    எந்தவொரு கட்சியாலும் தகுதி நீக்கம், சஸ்பெண்ட் ஆகியவற்றை செய்ய இயலாது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் கூற செய்ய அதிகாரம் இல்லை. சபாநாயகருக்குதான் அதிகாரம் உள்ளது. இது நீண்டு நடைமுறை. சபாநாயகர் அனுமதி இல்லாமல் இது நடைபெற வாய்ப்பில்லை'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

    சட்டசபையில் சபாநாயகர் எந்த பிரிவை தேசியவாத காங்கிரஸாக ஏற்றுக்கொள்கிறாரோ? அதுவரை பிரச்சினை பூதாகரமாக வெடிக்காது. தேர்தல் ஆணையத்தை முறையிடமாட்டார்கள் எனத் தெரிகிறது.

    • பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

    அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • பாஜகவில் இருந்து 9 பேர், சிவசேனா சார்பில் 9 பேர் பதவியேற்றனர்

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை, அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சார்பில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். சிவசேனா சார்பில் 9 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    • தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது.
    • கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கினர். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.


    துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

    துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

    ஆனால், கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. இன்று மாலையில், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பட்னாவிஸ் அறிவித்தார். அதேசமயம் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறினார். அதன்பின்னர் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    • பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
    • தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.

    பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா அதிருப்தி குழுவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளார் என்று இன்று மதியம் வரை தகவல் வெளியானது.

    ஆனால், இன்று மாலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பட்னாவிஸ் கூறினார். புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன், ஷிண்டேவின் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.

    ×