search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Products"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 23.73 குவிண்டால் எடை கொண்ட 8,012 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.15-க்கும், சராசரி விலையாக ரூ.25.15-க்கும் என மொத்தம் ரூ.58ஆயிரத்து 121-க்கு விற்பனையானது.

    228.02 குவிண்டால் எடை கொண்ட 467-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.76-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனை ஆனது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.91-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 73ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.

    36.35 குவிண்டால் எடை கொண்ட 50-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.144.10-க்கும், சராசரி விலையாக ரூ.158.10-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 218-க்கு விற்பனையானது.

    194.25 குவிண்டால் எடை கொண்ட 592-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 6ஆயிரத்து 875-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.38 லட்சத்து 3 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    • மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
    • எராளனோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மாவட்ட துணை இயக்குனர் கண்ணகி தலைமையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் வேளாண்மை அலுவலர் பிரதிபா முன்னிலை வகித்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அனைத்து விவசாயக் பண்ணைக்கருவிகள் தார்பாலின், ஜிப்சம், ஜிங்சல்பேட், விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கண்ணகி தெரிவித்தார்.

    அதேபோல நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிரிட தேவையான உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கம் வட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி கேட்டுக் கொண்டார்.

    இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், சரவணன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.00 1/2குவிண்டால் எடை கொண்ட 6993 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.49-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.61ஆயிரத்து 194-க்கு விற்பனையானது.

    அதேபோல் 244.57குவிண்டால் எடை கொண்ட 503-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.12-க்கும், சராசரி விலையாக ரூ.75.75-க்கும் என மொத்தம் ரூ.18லட்சத்து 60ஆயிரத்து 696-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19லட்சத்து 21 ஆயிரத்து890-க்கு விற்பனையானது.

    • நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.64 குவிண்டால் எடை கொண்ட 5,354 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.05-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.41ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 415.56 குவிண்டால் எடை கொண்ட 815 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.75.55-க்கும், சராசரி விலையாக ரூ.83.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.62-க்கும், சராசரி விலையாக ரூ.78.08-க்கும் என மொத்தம் ரூ.30லட்சத்து 78ஆயிரத்து 288-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.31 லட்சத்து 19 ஆயிரத்து 631-க்கு விற்பனையானது. 

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    எள்

    மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    • ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.

    16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • 7,514 தேங்காய்கள் வரத்து இருந்தது

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 டன் வேளாண் விளைபொருட்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வார ஏலத்துக்கு, 7,514 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,206 கிலோ.

    விலை கிலோ ரூ.18.15 முதல் ரூ.23.45 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.22.35.28 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 725 கிலோ. விலை கிலோ ரூ.56.10 முதல் ரூ.75.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.68.35.ஏலத்தில் மொத்தம் 60 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1.12 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.63½ குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 201 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.81-க்கும், சராசரி விலையாக ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

    அதேபோல் 353.52 குவிண்டால் எடை கொண்ட 725 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.05-க்கும், சராசரி விலையாக ரூ.76.79-க்கும் விற்பனை யானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.66-க்கும், சராசரி விலையாக ரூ.71.87-க்கும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 80 ஆயிரத்து 579-க்கு விற்பனை யானது.

    அதேபோல் 69.81½ குவின்டால் எடை கொண்ட 230 மூட்டை நிலக்கட லைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கட லைக்காய் அதிக விலையாக ரூ.80.09-க்கும், குறைந்த விலையாக ரூ.65.69-க்கும், சராசரி விலையாக ரூ.73.70 -க்கும் என ரூ 4 லட்சத்து 77ஆயிரத்து 262-க்கு விற்பனை யானது. சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனை யானது.

    • சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

     வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,574 கிலோ. விலை கிலோ ரூ.21.25 முதல் ரூ.23.50 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.00.

    45 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,192 கிலோ. விலை கிலோ ரூ.55.35 முதல் ரூ.74.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.73.65. ஏலத்தில் மொத்தம் 54 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 79.27 குவிண்டால் எடை கொண்ட 22ஆயிரத்து 416 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.26.15-க்கும், குறைந்த விலையாக ரூ.20.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.46-க்கும் என ரூ.ஒரு லட்சத்து76ஆயிரத்து 304க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 214.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.86.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.39-க்கும், சராசரி விலையாக ரூ.85.80ம், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.60-க்கும், குறைந்த விலையாக ரூ.73.89க்-கும், சராசரி விலையாக ரூ.79.29-க்கும் என்று ரூ.17 லட்சத்து 29 ஆயிரத்து 152க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    ×