என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் கிடைக்கும்
- மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
- எராளனோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மாவட்ட துணை இயக்குனர் கண்ணகி தலைமையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் வேளாண்மை அலுவலர் பிரதிபா முன்னிலை வகித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அனைத்து விவசாயக் பண்ணைக்கருவிகள் தார்பாலின், ஜிப்சம், ஜிங்சல்பேட், விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கண்ணகி தெரிவித்தார்.
அதேபோல நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிரிட தேவையான உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கம் வட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி கேட்டுக் கொண்டார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், சரவணன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.