search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் பொருட்கள் ரூ.19.22லட்சத்துக்கு விற்பனை
    X

    வேளாண் பொருட்கள் ரூ.19.22லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.00 1/2குவிண்டால் எடை கொண்ட 6993 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.49-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.61ஆயிரத்து 194-க்கு விற்பனையானது.

    அதேபோல் 244.57குவிண்டால் எடை கொண்ட 503-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.19-க்கும், சராசரி விலையாக ரூ.80.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.12-க்கும், சராசரி விலையாக ரூ.75.75-க்கும் என மொத்தம் ரூ.18லட்சத்து 60ஆயிரத்து 696-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.19லட்சத்து 21 ஆயிரத்து890-க்கு விற்பனையானது.

    Next Story
    ×