search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  வேளாண்பொருட்கள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை
    X

    சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண்பொருட்கள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.63½ குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 201 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.81-க்கும், சராசரி விலையாக ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

    அதேபோல் 353.52 குவிண்டால் எடை கொண்ட 725 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.05-க்கும், சராசரி விலையாக ரூ.76.79-க்கும் விற்பனை யானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.66-க்கும், சராசரி விலையாக ரூ.71.87-க்கும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 80 ஆயிரத்து 579-க்கு விற்பனை யானது.

    அதேபோல் 69.81½ குவின்டால் எடை கொண்ட 230 மூட்டை நிலக்கட லைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கட லைக்காய் அதிக விலையாக ரூ.80.09-க்கும், குறைந்த விலையாக ரூ.65.69-க்கும், சராசரி விலையாக ரூ.73.70 -க்கும் என ரூ 4 லட்சத்து 77ஆயிரத்து 262-க்கு விற்பனை யானது. சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனை யானது.

    Next Story
    ×