search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent suicide"

    • நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள குரங்குச்சாவடி ஏழுமலை கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி திவ்யா (24) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் திவ்யாவின் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் மோகன்ராஜ் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பகுதியை சேர்ந்தவர் சாமி. இவரது மகள் ஜான்சி (வயது 21). இவர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி போதம்பட்டி அருகே உள்ள வில்லாணியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த பாஸ்கரன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஒருதலை காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது20), கூலி தொழிலாளி. இவர் மேட்டு தொட்டியங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இவரது தந்தைக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் இவருடன் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். மனமுடைந்த ஆனந்த் அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆனந்தின் சகோதரர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையம் வாரச்சந்தையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் அருகி லேயே மோட்டார் சைக்கில் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து அப்பகுதியை பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் குன்னமலை அருகே குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (40) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரி வித்து வரவழைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கதிரேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் மகேஸ்(28). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜூக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பாக்கியராஜ் கேரளாவிற்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோமதிக்கு போனில் தெரிவித்தனர். உடனடியாக கோமதி மகள் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.பாக்கியராஜ் குடும்பத்தார் தெரிவித்த தகவல்களில் கோமதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகள் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த மேலஉரப்பனூரை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    இந்தநிலையில் நேற்று தாய் தமிழ்செல்வியிடம் ேசாடா வாங்கிவரும்படி கூறினார். அவர் கடைக்கு சென்றதும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சிவன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பலமுறை வீட்டை விட்டு வெளியே சென்று 2, 3 நாட்களில் திரும்பி வந்து விடுவாராம்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா மலையின் பின்புறம் உள்ள முனியாண்டி கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாதா ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை இல்லாததால் விரக்தி அடைந்தார்.
    • இதனால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). கூலி வேலைக்கு சென்று வந்த இவர், மேலும் தொடர்ந்து வேலை இல்லாத தால் விரக்தி அடைந்தார். இத னால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி யன் மற்றும் போலீசார் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தினர். வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    • புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சிவபெருமாள்(21). கட்டித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை பார்த்த இடத்தில் உள்ள மோட்டார் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(50). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த கிருஷ்ணசாமி, தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி முருகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் முனீஸ்வரி(வயது25). இவரும் விருதுநகர் அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி கருப்பசாமி என்பவரும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திரும ணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இ தன் காரணமாக முனீஸ்வரி கலிங்கப்ப ட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவருடன் சேர்ந்து வாழ முனீஸ்வரி விருப்பம் தெரிவித்தார். கருப்பசாமி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    சம்பவத்த ன்று கணவர் வேலை பார்க்கும் பட்டாசு ஆலைக்கு சென்று சேர்ந்து வாழ வேண்டும் என்று முனீ ஸ்வரி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி பெரியோர்கள் முன்னி லையில் பேசிய பின் சேர்ந்து வாழலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவனியாபுரத்தில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் செம்பூரணியை சேர்ந்த வேல்முருகனின் மகன் பாண்டித்துரை (வயது30). கட்டிட தொழிலாளி.

    நேற்று இவர் தனது பிறந்த நாளையொட்டி மது குடித்தார். போதையில் இருந்த பாண்டித்துரை திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் கத்தியால் கீறினார்.

    மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவனியாபுரம் போலீசார் பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கண்ணனேந்தல், ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில்வேல் (வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவரது சகோதரர் மதியழகன் மற்றும் நண்பர்கள், "ஏன் இப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, வாழ்க்கையை சீரழிக்கிறாய்?" என்று கண்டித்தனர்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்வேல், சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    செல்லூர் கே.சாலைப்புதூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (41). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    எந்த நேரமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்தாராம். இதை மனைவி தட்டி கேட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (83). இவருக்கு வயிற்று வலி மற்றும் மூட்டு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த நவநீதகிருஷ்ணன், நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×