என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒருதலை காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
- ஒருதலை காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது20), கூலி தொழிலாளி. இவர் மேட்டு தொட்டியங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இவரது தந்தைக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் இவருடன் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். மனமுடைந்த ஆனந்த் அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆனந்தின் சகோதரர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






