என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தற்கொலை
- விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் மகேஸ்(28). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜூக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பாக்கியராஜ் கேரளாவிற்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோமதிக்கு போனில் தெரிவித்தனர். உடனடியாக கோமதி மகள் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.பாக்கியராஜ் குடும்பத்தார் தெரிவித்த தகவல்களில் கோமதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகள் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்