search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    • இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பகுதியை சேர்ந்தவர் சாமி. இவரது மகள் ஜான்சி (வயது 21). இவர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி போதம்பட்டி அருகே உள்ள வில்லாணியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த பாஸ்கரன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×