search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியின் தம்பி திருமணத்திற்கு உதவ முடியாததால் வாலிபர் தற்கொலை
    X

    மனைவியின் தம்பி திருமணத்திற்கு உதவ முடியாததால் வாலிபர் தற்கொலை

    • நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள குரங்குச்சாவடி ஏழுமலை கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி திவ்யா (24) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் திவ்யாவின் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் மோகன்ராஜ் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×