search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water connection"

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
    • ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உரிய நேரத்தில் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் வரி செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி 1-வது மண்டலத்தில் 6, 2-வது மண்டலத்தில் 16, 3-வது மண்டலத்தில் 9, 4-வது மண்டலத்தில் 15 என மொத்தம் 46 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வரிகளை செலுத்தி, குடிநீர் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • சிவகாசி பகுதியில் வருகிற 28-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    சிவகாசி

    நகராட்சியாக இருந்த சிவகாசி 2021-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சொத்து வரி உயா்வு, நகராட்சி கணக்குகளை இணைத்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி வசூலில் காலதாமதம் ஏற்பட்டது.

    சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் வரி இனங்கள் மறு சீரமைப்புக்கு பின் கடந்த செப்டம்பா் மாதம் வரி வசூல் தொடங்கியது. உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    2021-22-ம் நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலை யில் அந்த ஆண்டு வரி வசூல் நிலுவை ரூ.7.70 கோடி உள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டிற்கான வரி வசூல் தற்போது வரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இதனால் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வருகிற 28-ந் தேதிக்குள் செலுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் வரி செலுத்தாமல் உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் வருகிற மாா்ச் இறுதிக்குள் 100 சதவீத% வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

    • வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    • ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் ஆதிநாராயணன் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

    • தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
    • பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.

    தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • தனி நபர் குடிநீர் அளவு 100 லிட்டராக உயர்ந்தது
    • பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை.

    கோவை

    கோவை மாவட்டத்தில் 228 ஊராட்திகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3,74,013 வீடுகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை. சிலர் போர்வெல் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் ஆதாரங்கள் பெற்று பயன்படுத்துகின்றனர்.

    சிலர், குட்டை, ஓடைகளில் வரும் நீரை பயன்படுத்துவதாக தெரிகிறது. சிலர் கிணற்று நீரை குடிநீரா பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் நீர் ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் நீண்டதூரம் குடிநீருக்காக சென்று வர வேண்டியிருக்கிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த திட்டத்தில் 1,87,515 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 41,869 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டது. இந்த ஆண்டில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர வேண்டி உள்ளது.

    15-வது நிதி திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பாக 21,332 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில் 19,557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வான நிலையில் இருக்கிறது. இந்த நீரை போர்வெல் மூலமாக எடுத்து மேல் நிலை தொட்டி அல்லது நிலமட்டத் தொட்டிகளில் சேகரித்து அதை குடியிருப்புகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் பிரதான குடிநீர் இணைப்புகளில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலமாக குடி நீரை பகிர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சில கிராமங்களில் வீடுகள் தொலைவில் ஆங்காங்கே அமைந்து–ள்ளது. சில வீடுகள் தோட்டம் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் இருக்கிறது. மேடு, பள்ளம் மற்றும் வழிப்பாதை இல்லாமல் கூட சில கிராமங்கள் இருக்கிறது. இங்கே ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக குடிநீர் எடுத்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நீர் மூலமாக குடிநீர் பகிர்மான குழாய் மூலமாக வெகு தூரம் கொண்டு செல்லவும் ஏற்பாடு நடக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் முழு அளவில் குடிநீர் வழங்க முடியும்.

    இதற்கான குழாய் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. முழு அளவில் குடிநீர் இணைப்பு வழங்கினால் குக்கிராமங்களில் பொதுமக்கள் வசிப்பது அதிகமாகும். அடிப்படை வசதிகளுக்காக நகர்ப்ப–குதிக்கு பொதுமக்கள் இடம் பெயர்ந்து செல்வது வெகுவாக குறையும்.

    குடிநீர் முழு அளவில் வழங்குவதன் மூலமாக கிராமங்களில் வளர்ச்சி பணிகள் அதிகமாகி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் தனி நபர் குடிநீர் அளவு தினமும் 100 லிட்டர் என உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    • திருப்புல்லாணி ஊராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமப்பகுதிகளில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    அதன் பின் கிடப்பில் உள்ளதால் குழாய்களில் குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்புல்லாணி 4 ரத வீதிகளில் ஜல்-ஜீவன் திட்டத்தில் பயன்பாட்டிற்காக வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, தரை தளம் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டது.கடந்தாண்டு அமைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. எனவே திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா கூறுகையில், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தேரோடும் 4 ரத வீதிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான புதிய வாறுகால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளது. விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொறுத்த உள்ளோம். அதன்பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    • ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    • பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 38 ஊராட்சி பகுதிகளில் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை வீட்டு வரி விதிக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 64 ஆயிரத்து 183 வீடுகள் உள்ளன. இதில் 56 ஆயிரத்து 398 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மீதி 7 ஆயிரத்து 785 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 அடுக்கு (மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி) 15-வது நிதிக்குழு மானியத்தில் மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.13 லட்சத்து 64 ஆயிரத்தில் 321 இணைப்புகளும், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.76 லட்சத்து 8 ஆயிரத்தில் 1,471 இணைப்புகளும், கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 666-ல் 5,993 இணைப்புகளும் என மொத்தம் 7,785 வீட்டுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது.

    இந்த வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்திற்கு 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.6 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 666 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி உத்தரவு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்ததும் பணிகளை தொடங்கி 2022-2023-ம் நிதி ஆண்டிற்குள் (2023 மார்ச் மாதத்திற்குள்) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டத்தில் பணிகளை செய்வது குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எம்.கந்தசாமி தலைமை தாங்கி நடத்தினார். அப்போது அவர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    ×