search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sag"

    • திருப்புல்லாணி ஊராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமப்பகுதிகளில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    அதன் பின் கிடப்பில் உள்ளதால் குழாய்களில் குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்புல்லாணி 4 ரத வீதிகளில் ஜல்-ஜீவன் திட்டத்தில் பயன்பாட்டிற்காக வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, தரை தளம் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டது.கடந்தாண்டு அமைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. எனவே திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா கூறுகையில், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தேரோடும் 4 ரத வீதிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான புதிய வாறுகால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளது. விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொறுத்த உள்ளோம். அதன்பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    ×