search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary Camp"

    • கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் குடற்புழுநீக்கல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல் உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    உடன்குடி:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை துணைஇயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். மேலும் தற்காலிக மலட்டு தன்மை நீக்குதல், குடற்புழுநீக்கல், ஆண்மை நீக்கம் செய்தல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல், மனது கால நோய்கள் தடுப்பு உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் மாதவன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கருப்பசாமிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் சிறந்த கலப்பின பசு, சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
    • மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு திட்ட முகாம் தென்திருப்பேரை பேரூராட்சி கல்லாம்பாறை கிராமத்தில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் சிறந்த கலப்பின பசு, கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

    முகாமில் ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், காளைகள் மற்றும் கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை சார்பில் இசக்கி செய்திருந்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாஸ்தாவின்நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாஸ்தாவின் நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார், விஜயகுமார், பராமரிப்பு உதவி ஆய்வாளர் சுதா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக சாஸ்தாவின் நல்லூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து மணி, பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி ஆகியோர்கலந்து கொண்டனர்.

    இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மேலும் சிறந்த கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு விருதும், சிறந்த கிடாரி கன்று வளர்த்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முகாமில் ராஜ்குமார், பேச்சி,சோமு, சீனி பாண்டி, கோபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
    • முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்ல பாண்டியன், ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டிபாய், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, குறுக்கு சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முகாமில், 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மைக்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கோ.மருதப்புரம் ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை பராமரி ப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் ஆராய்ச்சிநிலையம் இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஸ்வரி ஆகியோர் வரவேற்று பேசினர். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, எட்வின் மற்றும் ஆவின் சிறப்பு மேலாளர் சுந்தரம் வாழ்த்துரை வழங்கி னா ர்கள்.கோ.மருதப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் வீரம்மாள் கடற்கரை முன்னி லை வகித்தார்.முகாமில் கால்நடை மருத்து வர்கள் ரமேஷ், நாகராஜன், சுருளிராஜ், அந்தோணி, செல்வக்குத்தா லிங்கம், சந்திரலேகா, வசந்தா, ராமசெல்வம், சர்மதி, கார்த்திக், கவிநிலவன், மாரியப்பன், ஆவின் கால்நடை மருத்துவர்கள் காயத்திரி, சுனில், கால்நடை ஆயவா ளர்கள் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், கோபால் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாடத்தி, செல்வமணி, முத்து மாரியப்பன், கருப்ப சாமி, அனிதா, நம்பியார், வெங்க டேஷ், சுடலை ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், சிகிச்சை, ஆண்மைநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினை பார்த்தல், ஸ்கேன் செய்தல், ரத்தத்தில் எடுத்தல் போன்ற மருத்துவ பணிகள் நடைபெற்றன. நெல்லை மண்டல நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான்சுபாஷ், சங்கர ன்கோவில் உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, நடமாடும் கால்நடை மருத்துவபிரிவு மரு.சந்திரசேகரன் ஆகியோர் தொழில்நுட்ப அறிவுரை வழங்கினர். சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மை க்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள், கோ-4 ரக புல்த ரைகள் மற்றும் தாதுஉப்பு கலவை விவசாயி களுக்கு வழ ங்கப்பட்டது.சிறந்த நாட்டின நாய் வளர்ப்போ ர்க்கான பரிசுகள் வழங்க ப்பட்டது.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள், பொது மக்கள் முகாமில் அமைக்கப்பட்ட பல்வேறு உப கரணங்கள், நவீன தொழில் நுட்பங்களை விளக்கும் அரங்குகளை பார்வை யிட்டு பயன்பெற்ற னர். விழா ஏற்பாடுகளை குருக்கள்பட்டி கால்நடை மருத்துவர் நாகராஜன் செய்திருந்தனர்.

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ சிகிச்சை முகாமை நடைபெறுகிறது.
    • கால்நடை வளர்ப்போர்தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில், நாளை (27-ந் தேதி) மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை நடத்துகிறது.

    நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடு தல், செயற்கை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூ சிகள், நெறிநோய் தடுப்பூசிகள், புல்வளர்ப்பு, தாது உப்பு கவவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பவ்வேறு சுகாதார நட வடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தே கங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் கால்நடை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்தகன்று உரிமையாளர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் தங்கள் கால்நடைகளை கால்நடை மருத்துவர்களி டம் காண்பித்து உரிய மருத்துவ வசதி பெற்று தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரி வித்துள்ளார் தெரிவித்தார்.

    • ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது.
    • பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 3 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இம்முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் சார்பில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 8 மணிக்கு குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குறுக்கபாளையம் ஊராட்சி ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களால் கால்நடைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சையின் விவரங்கள் பின்வருமாறு:-

    குடற்புழு நீக்கம், நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ,சினை பிடிக்காமல் இருக்கும் கிடாரி கன்றுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்குதல், இலவச நோய் சிகிச்சைப்பணிகள், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் அளித்தல், கால்நடைகளுக்கு கர்ப்பபை தொடர்பான சிகிச்சைப்பணிகள், செயற்கை முறை கருவூட்டல் பணி, நுண்கதிர் மூலம் சினை பரிசோதனை செய்தல், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள்,நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு ரத்தம் மற்றும் இதர மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புதல், கால்நடைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை (1962),விவசாயிகளுடன் கருத்தரங்கு மற்றும் கால்நடை பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கலந்துரையாடல், சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு , சிறந்த கால்நடை தொழிற்நுட்ப விவசாயிகளுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான மடி நோய் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், கிசான் அட்டை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்போருக்கு சான்றிதழ் மற்றும் கால்நடை மருந்துகளை பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். இதில் மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன்,கால்நடை மருத்துவர் அன்பரசு, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் வி.களத்தூர் கால்நடை உதவி மருத்துவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்கம், மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார்.

    இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், சினை ஊசி போடுதல், தாது உப்பு வழங்குதல், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் பரா மரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், ஏரிபாசன தலைவர் மன்னார், கிளை செயலாளர் சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×