search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலநீலிதநல்லூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    முகாமில் விவசாயிகளுக்கு பரிசுகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    மேலநீலிதநல்லூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • முகாமில், 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மைக்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கோ.மருதப்புரம் ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை பராமரி ப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் ஆராய்ச்சிநிலையம் இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஸ்வரி ஆகியோர் வரவேற்று பேசினர். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, எட்வின் மற்றும் ஆவின் சிறப்பு மேலாளர் சுந்தரம் வாழ்த்துரை வழங்கி னா ர்கள்.கோ.மருதப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் வீரம்மாள் கடற்கரை முன்னி லை வகித்தார்.முகாமில் கால்நடை மருத்து வர்கள் ரமேஷ், நாகராஜன், சுருளிராஜ், அந்தோணி, செல்வக்குத்தா லிங்கம், சந்திரலேகா, வசந்தா, ராமசெல்வம், சர்மதி, கார்த்திக், கவிநிலவன், மாரியப்பன், ஆவின் கால்நடை மருத்துவர்கள் காயத்திரி, சுனில், கால்நடை ஆயவா ளர்கள் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், கோபால் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாடத்தி, செல்வமணி, முத்து மாரியப்பன், கருப்ப சாமி, அனிதா, நம்பியார், வெங்க டேஷ், சுடலை ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், சிகிச்சை, ஆண்மைநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினை பார்த்தல், ஸ்கேன் செய்தல், ரத்தத்தில் எடுத்தல் போன்ற மருத்துவ பணிகள் நடைபெற்றன. நெல்லை மண்டல நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான்சுபாஷ், சங்கர ன்கோவில் உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, நடமாடும் கால்நடை மருத்துவபிரிவு மரு.சந்திரசேகரன் ஆகியோர் தொழில்நுட்ப அறிவுரை வழங்கினர். சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மை க்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள், கோ-4 ரக புல்த ரைகள் மற்றும் தாதுஉப்பு கலவை விவசாயி களுக்கு வழ ங்கப்பட்டது.சிறந்த நாட்டின நாய் வளர்ப்போ ர்க்கான பரிசுகள் வழங்க ப்பட்டது.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள், பொது மக்கள் முகாமில் அமைக்கப்பட்ட பல்வேறு உப கரணங்கள், நவீன தொழில் நுட்பங்களை விளக்கும் அரங்குகளை பார்வை யிட்டு பயன்பெற்ற னர். விழா ஏற்பாடுகளை குருக்கள்பட்டி கால்நடை மருத்துவர் நாகராஜன் செய்திருந்தனர்.

    Next Story
    ×