search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VSR International School"

    • போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • பெண்களுக்கான போட்டியில் வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுமத்தினர் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடத்தியது. 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர் பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற நாகர்கோவில் லிட்டில் சேம்பியன் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நாகர்கோவில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி அதிக புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.

    திசையன்விளை:

    வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார். 

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கைப்பந்து, இறகு பந்து, எறிபந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பின்னர் பள்ளி மாணவர்கள் தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை சுற்றி வந்து பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விளையாட்டு கம்பத்தில் தீபத்தை ஏற்றி தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.

    12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற புனித அந்தோணியார் பப்ளிக் பள்ளிக்கு வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது.

    திசையன்விளை:

    பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது. 7-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மலாலாவின் பெருமை களைப் குறுநாடகம் மற்றும் உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

    தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் பேசும்போது, கல்வி என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று எனக்கூறி மலாலா பெண்கல்விக்காக போராடி யதை எடுத்துரைத்தார். முதல்வர் பாத்திமா எலிசபெத் கூறுகையில், மலாலா கல்விக்காக செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கற்றல் வேண்டும் என்றார்.

    • பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.
    • ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளை யாட்டு களில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். மேலும் ஒலிம்பிக் விளை யாட்டு களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பல சாத னைகள் படைத்து இந்திய நாட்டிற்குப் பெரு மைகள் பல சேர்த்துள்ள தைப் பற்றி தங்கள் நடிப்புத் திறன் மூலம் எடுத்துரை த்தனர்.

    ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர். பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் வருங்கால ஒலிம்பிக்கில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்களும் பங்கேற்று நம் பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்க ளை ஊக்குவித்து பேசினார்

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.

    • பொங்கல் விழாவில் நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.
    • பொங்கல் விழா கொண்டாட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர் நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தி னராக நெல்லை மாவட்ட திட்ட துணை அலுவலர் சுமதி மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைஅலுவலர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலராடை அணிந்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் 4 குழுவாகப் பிரிந்து பொங்கலிட்டனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் தீ மூட்டி அடுப்புப் பற்ற வைத்தனர். கதிரவனால் விளைந்த நெல், காய்கறிகள், பழங்கள், கரும்பு ஆகியவற்றை கதிரவனுக்கு படைத்து வழிபட்டனர். பல வகையான உணவு வகைகளை படைத்தனர். பொங்கலுக்கு அடிப்படை காரணமாக உழவுக்கும், உழவர்களுக்கும் வந்தனை செய்யும் விதமாக உழவர்கள் பயன்படுத்தும் ஏர் கலப்பை, மாட்டு வண்டி, மண்வெட்டி போன்ற கருவிகளையும் அலங்கரித்து வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஆசிரியர்களுக்கும் தனிப்போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    • உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.
    • பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய காலை வழிபாட்டு நிகழ்வை 1-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பித்தனர். அவர்கள் உணவின் முக்கியத்துவம் குறித்தும் நமது உடலைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், திணை வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை எவ்வாறு நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தேசிய உணவு தினத்தை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்ளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

    1 முதல் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரட் பயன்படுத்தி வடிவங்கள் உருவாக்குதல். 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் பயன்படுத்தி சாலட் தயாரித்தல் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நெருப்பின்றி உணவு தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

    உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர். மேலும் அதனைப் பார்வையிட தகுந்தபடி முறையாக அழகுபடுத்தி வைத்திருந்தனர்.

    இவற்றை பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பார்வையிட்டு சிறப்பாக உணவு தயாரித்து விளக்கவுரை அளித்த மாணவர்களை தேர்ந்தெ டுத்து அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    • நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட ப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களை கேட்டனர். ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர்.

    பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. ஆசிரியர்ளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    • 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்தனர்.
    • ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் தலைமை தாங்கினார்.

    10-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

    மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இப்பயிற்சிகளை செய்தனர். சூர்ய நமஸ்காரம், விருட்சாசனம்ரூபவ், வஜ்ராசனமரூபவ், வீரபத்ராசனமரூபவ், உஸ்தாசனமரூபவ், யோகமுத்ரா போன்ற ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது.

    இறுதியில் யோகாசன பயிற்சியாளர் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

    ×