search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Yoga Day"

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் நாம் தினமும் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி யோகாவின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

    இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மற்றும் பூச்சியம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.

    • மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    உலக யோகா தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ் யோகா குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    • நீதிபதிகள் பங்கேற்பு
    • தியான பயிற்சியில் ஈடுபட்டனர்

    ராணிப்பேட்டை:

    உலக யோகா தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, மாஜிஸ்திரேட் நவீன் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    யோகா மாஸ்டர் வஜ்ஜிரவேல், பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் தியானம் பயிற்சி அளித்தனர்.

    இதில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் ஜான் சாலமன்ராஜா நன்றி கூறினார்.

    இதே போல் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்திய யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கபில்தேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுராசனம், வஜ்ஜிராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.

    • விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
    • கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம், அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறார்கள் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலகயோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    133 ஆசனங்கள்

    இதில் 9 வயது சிறுமி ரவீனா, 133 திருக்குறள் அதிகாரங்களை கூற 133 ஆசனங்களைச் செய்து அசத்தி னார். நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா கழக நிறுவனர் சுரேஷ் குமார் வரவேற்றார்.

    அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மைக்ரோ பாயிண்ட் கல்வி மைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், வக்கீல் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    பரிசு வழங்கல்

    விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மாணவியை பாராட்டி பொன்னாடை போத்தி பரிசு வழங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக ரம்யா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனர் ஷீலா ஜாஸ்மின் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் தொழிலதிபர் ராமராஜ் நன்றி கூறினார்.

    • திருவெண்ணைநல்லூர் போன் நேரு பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது.
    • யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போன்நேரு மேல்நிலைப் பள்ளி மற்றும் விழுப்புரம் கோ சேவா சார்பில் பள்ளிவளாகத்தில் உலக யோகா தினம் நடைபெற்றது .பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் தொழிலதிபர் தருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் அவசியம் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக கூறினார். யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார். இதில் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம் நடைெபற்றது,
    • பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன,

    விழுப்புரம்:

    உலக யோகா தினத்தையொட்டி விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவின் எதிரே உள்ள வின்னர் போலீஸ் போலீஸ் அகடமிக்-விழுப்புரம் சாலாமேடு மனவளக்கலைசார்பில் வின்னர் போலீஸ் அகடமிக் நிறுவனத் தலைவரும் முதல்வரும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான ராமராஜன் தலைமையில் உலக யோகா தினம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில்சாலாமேடு மனவளக்கலை நிர்வாகிகள், உறுப்பினர்கள்,வின்னர் போலீஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும்போலீஸ் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இயற்கை உணவுகளும் இயற்கை பானங்களும் வழங்கப்பட்டன.

    ×