search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Road"

    • மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    உலக யோகா தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ் யோகா குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    ×