search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tysayanvilai"

    • தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
    • கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜேம்ஸ் மரைன் கல்லூரியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி, மக்கள் தொடர்பு அலுவலர் பிரின்ஸ் பிரேம்குமா,ர் ஆசிரியர் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.
    • ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளை யாட்டு களில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். மேலும் ஒலிம்பிக் விளை யாட்டு களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பல சாத னைகள் படைத்து இந்திய நாட்டிற்குப் பெரு மைகள் பல சேர்த்துள்ள தைப் பற்றி தங்கள் நடிப்புத் திறன் மூலம் எடுத்துரை த்தனர்.

    ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர். பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் வருங்கால ஒலிம்பிக்கில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்களும் பங்கேற்று நம் பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்க ளை ஊக்குவித்து பேசினார்

    • நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

    இதனை தொடங்கும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். கெனிஸ்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் மவுலின், இசக்கி பாபு, கோட்டை கருங்குளம் சொக்கலிங்கம், இடிந்தகரை சந்த்தியாகு, ராஜேஷ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், வேணுகோபால், காமில், நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் தினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது
    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவல்குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தாண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் மௌலின், இசக்கி பாபு, நவ்வலடி சரவண குமார், திசைய ன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், உதயா, திசைய ன்விளை பேரூர் இளை ஞரணி அமை ப்பாளர் நெல்சன், உவரி அல்போன்ஸ், அந்தோனி, க. புதூர் ராம கிரு ஷ்ணன், ரம்கிஷோர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.
    • விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் ஒன்றியத்தில் 179 கிராமங்களுக்கும், ராதாபுரம் ஒன்றியத்தில் 181 கிராமங்களுக்கும், நாங்குநேரி ஒன்றியத்தில் 259 கிராமங்களுக்கும், களக்காடு ஒன்றியத்தில் 149 கிராமங்களுக்கும், சேரன்மாதேவி ஒன்றியத்தில் 22 கிராமங்களுக்கும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 41 கிராமங்களுக்கும் என 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.605 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், படையப்பா முருகன், ஊராட்சி மன்ற தலை வர் பேபிமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோ ரன்ஸ் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    • விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழைமையும், பெருமையும் நிறைந்தது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார்.

    வைகாசி விசாக திருவிழா

    இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுசிறப்பாக நடை பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    1-ந்தேதி (வியாழக் கிழமை) அதிகாலை கோவில் நடை திறப்பு, தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, இரவு சமைய சொற்பொ ழிவு, சுயம்பு லிங்கசுவாமி வரலாறு வில்லிசை, நகைச்சுவை, திரை இசை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடக்கிறது.

    கோவில் நடை திறப்பு

    வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாக திருவிழா அதிகாலை கோவில் நடை திறப்பு தொ டர்ந்து பல்வேறு வகை யான சிறப்பு பூஜைகள் திருவாசக முற்றோதுதல், மாலை மங்கள இசை, நாதஸ்வரம் இரவு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×