search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tree sapling program"

    • நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

    இதனை தொடங்கும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். கெனிஸ்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் மவுலின், இசக்கி பாபு, கோட்டை கருங்குளம் சொக்கலிங்கம், இடிந்தகரை சந்த்தியாகு, ராஜேஷ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், வேணுகோபால், காமில், நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் தினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரி - நாசரேத் - சாத்தான்குளம் நெடுஞ்சா லையில் நாவல், புங்கை, வேம்பு, புளியமரம் உட்பட சுமார் 2,500 மர கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரகன்று களை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செ ந்தூர் கோட்ட உதவி பொறி யாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின், வரண்டி யவேல் பஞ்சாயத்த துணைத் தலைவர் அருண், சாலை ஆய்வாளர் பெத் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காங்கேயம் :

    காங்கேயம் சுற்று வட்டாரங்களில் சுற்றுச்சூழல் நலன் மேம்படுத்தும் வகையில்பள்ளிகள், தோட்டங்கள்,கோவில் மற்றும் பொது வளாகங்க ளில் மக்களின் முழு ஒத்துழைப்புடன் காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணியின் தொடர்ச்சியாக 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம், தாராபுரம் ரோட்டிலுள்ள காடையீஸ்வரா நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் டி.மகேஷ் குமார், காங்கயம் நகர் மன்ற தலைவர் என்.சூரிய பிரகாஷ், சாம்சன் சி.என்.ஓ.இன்டஸ்டிரீஸ் நல்லி எஸ்.மோகன் குமார், காங்கயம் சிவா ஏஜென்சி சிவசுப்பிரமணி, ஊதியூர் புளூ மெட்டல்ஸ் டி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னின்று தொடங்கி வைத்தனர். இதில் துளிகள் அமைப்பினர், பொதும க்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×