என் மலர்
நீங்கள் தேடியது "James Marine College"
- தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
- கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜேம்ஸ் மரைன் கல்லூரியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி, மக்கள் தொடர்பு அலுவலர் பிரின்ஸ் பிரேம்குமா,ர் ஆசிரியர் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.






