search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samathuva Pongal"

    • வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில, நகரம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் விமலா மகேந்திரன், முனியராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் (கி.ஊ), ஊராட்சி செயலாளர், பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனை வருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் அருகே உள்ள நகரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் சந்திர மோகன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து துணை இயக்குநர் பிரான்சிஸ் மகாராஜன், ஊராட்சித் மன்றத் தலைவர் அமுதாரமணிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், முனியராஜ், ஊராட்சி துணைத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் (கி.ஊ), கிளை செயலாளர் ஆனந்தன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளார் மணிகண்டன், விக்கி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகரம் ஊராட்சி மன்ற தூய்மை பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே துரைச்சாமியா புரம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான கபடி போட்டி நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளைச் செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் தேவராஜன், அவைத் தலைவர் ஜார்ஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார்.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர்கள் தர்மன், எஸ்.வி.சுரேஷ், மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், மாநகர துணைச்செயலாளர்கள் சுதா மூர்த்தி, பிரபு, கவுன்சிலர்கள் உலகநாதன், கந்தன், பவுல்ராஜ், கோகுலவாணி, இந்திரா சுண்ணாம்பு மணி, பேச்சியம்மாள், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், பொறியாளர் அணி சாய், நிர்வாகிகள் முகமது அலி, புவனேஷ்வரி, வசந்தி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி பலராமன், காசிமணி, மாநகர வர்த்தக அணி எல்.ஐ.சி.பேச்சிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா தச்சநல்லூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • விழாவில் சிறுவர்- சிறுமிகளின் சிலம்பாட்டம், வாள் சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா தச்சநல்லூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பின்னர் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் சிறுவர்- சிறுமிகளின் சிலம்பாட்டம், வாள் சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அவற்றை அனைவரும் கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் 2-வது வார்டு வட்ட செயலாளர் பாக்கியராஜ், 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகையா பாண்டியன், வட்ட செயலாளர் பாறையடி மணி, பழைய பேட்டை கணேஷ், நிர்வாகிகள் நெடுஞ்செழியன், வாசு, தளவாய், தச்சை பாலசுப்பிரமணி, சண்முகையாபாண்டியன், தச்சை மண்டல மேஸ்திரி ஜானகிராமன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகையா பாண்டியன் செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன.
    • பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார்.

    கடலூர்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் அலங்காரம் செய்து, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு இருந்தது. தாரை, தப்பட்டையும் இசைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டது.

    மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அனைவரையும் வரவேற்று கோலப்பொடியால் எழுதப்பட்டு இருந்தது. அப்போது திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன.

    சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடல் திடீரென இசைக்கப்பட்டது.

    இந்த பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார். இதை சக பெண் கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். அவரோடு மற்றொரு சிறுமியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

    அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஒருவரும் தப்பாட்டத்துக்கு நடனமாடினார்.

    • பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் முன்னிலையில் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. தூய்மை பணியாளர்கள் 50 நபர்களுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கழியலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டியம் போன்ற பல்–வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.ராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    விழாவில் கல்லூரி குழு மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார், எம்.ஜோசப் பெல்சி, பண்ணை கே.செல்வகுமார், பி.ரகுநாதன், டி.சாரா சவுந்தரராஜன், பி.செல்வராஜ் நாடார், கோபால் நாடார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த்துறை, கவின்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரகாஷ், கிராமிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.
    • இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு கனிமொழி எம்.பி,பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

    விழாவில் 15 பொங்க பாணை வைக்கப்பட்டு அதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செய லாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கலிட்டனர்.

    பின்னர் ஆயிரம் பெண்களுக்கு சேலை வழங்கி கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொங்கல் என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடும் திருநாளாகும். இந்த திருவிழா என்பது ஒவ்வொரு தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கவர்னர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சர்ச்சை கருத்து மூலம் நம்முடைய அடையாளம் கலாச்சாரம் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது தேவையற்றது. ஒற்றுமையாக தமிழர்கள் இருந்து வருகிறோம். இதுபோன்ற கலாச்சாரங் களை பேணி பாதுகாக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு சூழுரை யேற்போம்.

    தமிழன் அடையாளம், பெருமை, திறமை, வரலாறு இவற்றை பின்பற்றுவோம். இங்கு பொங்கலிடும் போது பெண்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவர்கள் இமையை கசக்கி கொண்டு நின்றனர். இது போன்ற விறகு அடுப்பில் பெண்கள் சிரமப்படக்கூடாது என்று கியாஸ் அடுப்பு உங்களுக்கு எல்லாம் கலைஞர் கொடுத்தார். இன்றைய தலைமுறையை பற்றி கலைஞர் சிந்தித்து செயல்பட்டார். தற்போது இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    கீதாஜீவன் பேசுகையில் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதுபோல் உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களும், கிடைக்க பெற்று நலமுடன் அனைவரும் வாழ வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமா தேவி,பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவிதாதேவி, சேர்மபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரி யர்கள் கவுரவிக்கப் பட்ட னர். திரேஸ்புரம் பகுதி துணைச்செயலாளர் சோலை யப்பன் நன்றி கூறினார்.

    • சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.
    • விழாவில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசினர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வணிகவியல் துறை தலைவர் வேணுகோபால் வரவேற்றார்.விஜிலா ஜாஸ்மின் தொகுத்து வழங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    சமத்துவ பொங்கல் என்பது அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது முன்பெல்லாம் சிறிய அளவில் நடந்து வந்த நிகழ்ச்சி தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    உயர்கல்வி துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த வர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். 1989-ல் தமிழகத்தில் மாவட்ட அளவில் ஒரு கல்லூரி என இருந்த நிலையில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உருவாக காரண மாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

    மேலும் காமராஜர் வழியில் கல்விக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000-மும் ஊக்க தொகை வழங்கி மாணவிகளின் கல்வியை ஊக்குவித்து வருகின்றார்.

    தற்போது சங்கரன் கோவில் தொகுதியில் 30 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. மாணவ , மாணவிகளான நீங்கள் கல்வி விளையாட்டு மட்டுமல்லாமல் நமது தொகுதி முன்னேறவும் உங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி, மூத்த உறுப்பினர் சந்திரன், சார்பு அணி பத்மநாபன், பிரேம்குமார், இளைஞர் அணி சரவணன், ஆதிதிராவிடர் அணி யோசேப்பு, சூரியநாராயணமூர்த்தி, வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், வெள்ளத்துரை, சிவா மற்றும் மாரிகுட்டி, ஜான், பாரதிராஜா, பில்லா கணேசன், வக்கீல் சதீஷ் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கலாகோபி நன்றி கூறினார்.

    ×