search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moeen Ali"

    • இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
    • ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.

    இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.

    எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.

    • ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன்.
    • இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.

    ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    • முதல் டெஸ்டின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

    லண்டன்:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    அதற்குள் மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியில் 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ரெஹான் அகமது கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விளையாடி இருந்தார்.

    • ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
    • இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.

    இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும். இதனால் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.

    ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.

    இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும்.
    • கேஎல் ராகுல்-ரோகித் சர்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது. இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.

    இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் - ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒசாமா என ஆஸ்திரேலியா வீரர்கள் அழைத்தனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மொயீன் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயீன் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.



    இந்நிலையில் மொயீன் அலி விவகாரம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறுகையில்  “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயீன் அலியிடம் தெரிவிக்கப்பட்டது.  அவரும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.

    மேலும், புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வொர்செஸ்டர்ஷைர் சாம்பியன் பட்டம் வென்றது. #T20Blast
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கவுன்ட்டி அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சசக்ஸ் - வொர்செஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சசக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் 3-வது வீரர் லயுரி எவன்ஸ் 44 பந்தில் 52 ரன்களும், லூக் ரைட் 25 பந்தில் 33 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. வொர்செஸ்டர்ஷைர் அணி சார்பில் கேப்டன் மொயீன் அலி 4 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    46 ரன்கள் அடித்த வொர்செஸ்டர்ஷைர் அணியின் பென் கோக்ஸ்

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வொர்செஸ்டர்ஷைர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் (33), மொயீன் அலி (41) சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.

    அதன்பின் வந்த இரு வீரர்கள் சொதப்பினாலும், விக்கெட் கீப்பர் பென் கோக்ஸ் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 46 ரன்கள் சேர்க்க வொர்செஸ்டர்ஷைர் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    ஆடுகளத்தில் மூர்க்கத்தனமாக செயல்படும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக அனுதாபம் என்ற பேச்சுக்கு இடமில்லை என மொயீன் அலி தெரிவித்துள்ளார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் விளையாடியபோது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது மொயீன் அலி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவர் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது, அந்த அணி வீரர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இதற்கிடையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விமர்சித்தாலும் சிலர் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக்கூடாது என்று அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மூர்க்கத்தானமாக செயல்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது ஆஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.



    கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் முதன்முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடும்போது, அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள். அது என்னை முதன்முறையாக தாக்கியது. 2015 ஆஷஸ் தொடரிலும் மோசமாக நடந்து கொண்டார்கள்.

    தவறு செய்த மூன்று பேர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தம் பட கடினமாக உள்ளது’’ என்றார்.
    விராட் கோலி 58 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 119 ரன்கள் தேவைப்படுகிறது. ரகானே 44 ரன்னுடனும் களத்தில் உள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியா களம் இறங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி அரைசதம் அடித்தார். ரகானே அரைசதத்தை நெருங்கினார்.

    இந்த ஜோடி 4-வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முழு செசனும் விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஓவர்களுக்கு முன் விராட் கோலி 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது.



    இந்தியாவின் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை்பபட்டது. ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

    தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார்.

    அடுத்து ரகானே உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்தியா 54 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 45 ரன்களுடனும், ரிஷப் பந்த் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    கவுன்ட்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இரட்டை சதம் அடித்தார். #MoeenAli
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அடில் ரஷித் சிறப்பாக பந்து வீசியதால் இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாடி வருகிறார். இவர் இடம்பிடித்துள்ள வொர்செஸ்டர்ஷைர் அணி யார்க்‌ஷைர் அணிக்கெதிராக விளையாடி வருகிறது.



    முதலில் பேட்டிங் செய்த யார்க்‌ஷைர் முதல் இன்னிங்சில் 216 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மொயீன் அலி இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதன்பின் வொர்செஸ்டர்ஷைர் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மிட்செல் 178 ரன்கள் குவித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மொயீன் அலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இரட்டை சதம் அடித்ததோடு 277 பந்துகளை சந்தித்து 27 பவுண்டரி, 4 சிக்சருடன் 219 ரன்கள் குவித்தார்.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காததால், டி20 போட்டியில் விளையாட மொயீன் அலி விடுவிக்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, போர்ட்டர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

    ஆனால் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொயீன் அலி வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காகவும், போர்ட்டர் எசக்ஸ் ஈகிள் அணிக்காகவும் விளையாடி வருகின்றன.


    போர்ட்டர்

    டி20 பிளாஸ்ட் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இவர்கள் பங்கேற்றுள்ள அணிகள் முதல் நான்கு இடத்திற்குள் வந்தால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஐந்து நாட்கள் சும்மா இருப்பதை விட டி20யில் விளையாட விரும்பினார்கள்.

    இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரையும் இங்கிலாந்து அணியில் இருந்து விடுவித்துள்ளது.
    இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. மொயீன் அலிக்கு இடமில்லை. #ENGvIND #MoeenAli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நாளை நடக்கிறது. இது இங்கிலாந்துக்கு 1000-மாவது டெஸ்ட் ஆகும். இந்த டெஸ்டில் விளையாடும் 11 பேர்  கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.



    இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கப் பதிலாக ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அடில் ரஷித்திற்கு இடம் கிடைத்துள்ளது.

    இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.  #ENGvIND #MoeenAli
    ×