என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "T20 Blast"
- பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி.
- இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.
வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர்.
நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.
முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.
3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார்.
4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார்.
5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார்.
இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன சாம் பில்லிங்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லங்காஷைர் அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான டேவியஸ் (15), பட்லர் (0), லில்லி (9) சொற் ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜென்னிங்ஸ் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த கேப்டன் விலாஸ், கிளார்க் ஆகியோர் அவுட்டாகாமல் முறையே 30, 29 ரன்கள் அடிக்க லங்காஷைர் 18.4 ஓவரில 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிடில்செக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. மோர்கன் களத்தில் இருந்தார். ஜாஃப்ரா ஆர்செர் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மோர்கன் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.
அடுத்த பந்தில் ஜான் சிம்ப்சனையும், அதற்கடுத்த பந்தில் ஜேம்ஸ் புல்லரையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவரது பந்து வீச்சால் சசக்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாரம்பரியம் மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மியூசியம் ஒன்று உள்ளது. இங்கு சாதனைப் புரிந்த வீரர்களை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்படும்.
அந்த வகையில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த ஆர்செரின் ஜெர்சியை மியூசியத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.
பார்படோஸில் பிறந்த ஆர்செர் அந்நாட்டில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஏழு வருடங்கள் இங்கிலாந்தில் வசித்தால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடலாம். அந்த வகையில் 2022-ல் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
⚡️ Magical from @craig_arch!
— Sussex Cricket (@SussexCCC) August 2, 2018
A masterclass in death bowling, and a hat-trick for Jofra! #SharkAttackpic.twitter.com/ZSTNV5gapX
ஆனால் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொயீன் அலி வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காகவும், போர்ட்டர் எசக்ஸ் ஈகிள் அணிக்காகவும் விளையாடி வருகின்றன.
போர்ட்டர்
டி20 பிளாஸ்ட் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இவர்கள் பங்கேற்றுள்ள அணிகள் முதல் நான்கு இடத்திற்குள் வந்தால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஐந்து நாட்கள் சும்மா இருப்பதை விட டி20யில் விளையாட விரும்பினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரையும் இங்கிலாந்து அணியில் இருந்து விடுவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்