search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rehan Ahmed"

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    • 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஞ்சி:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

     

    இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:-

    பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி

    • ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
    • விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற நிலை இருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    2-வது டெஸ்ட் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த போட்டிக்கு 2 வாரங்கள் இருந்ததால் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்ட் முடிந்தவுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு சென்றது.

    அபுதாபியில் 10 தினங்களில் ஓய்வு எடுத்த பிறகு இங்கிலாந்து அணி நேற்று மாலை இந்தியா திரும்பியது. அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ராஜ்கோட் வந்தனர்.

    அப்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீரர் ரேகான் அகமது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரங்கள் விசாரணை நடத்தினர்.

    ரேகான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார். தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் வந்ததால் விசா பிரச்சினையில் விசாரிக்கப்பட்டார். நிலமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு 2 நாள் விசா வழங்கினார்கள்.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அடுத்த 2 தினங்களுக்குள் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேகான் அகமது மற்ற வீரர்களுடன் நுழைய அனுமதிக்கப்பட்டார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த சோயிப் பஷீர் விசா பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் அவரால் முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது.

    • முதல் டெஸ்டின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.
    • மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

    லண்டன்:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    அதற்குள் மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியில் 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ரெஹான் அகமது கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விளையாடி இருந்தார்.

    • பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.
    • இங்கிலாந்தின் இளம் பந்துவீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    கராச்சி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 304 ரன்களையும், இங்கிலாந்து அணி 354 ரன்களையும் எடுத்தது. இதையடுத்து நடந்த 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் இளம் பந்துவீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையையும், ரெஹான் அகமது ஏற்படுத்தியுள்ளார்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயது 193 நாட்கள்.

    தற்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரெஹான் அகமதுவுக்கு 18 வயது மற்றும் 126 நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது. இதன்மூலம் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    • பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    • ராவல்பிண்டி, முல்தான் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாளை கராச்சியில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்-வாஷ் செய்ய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.

    நாளை தொடங்கும் கராச்சி டெஸ்டில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரேகன் அகமது களம் இறங்குவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 வயது ஆகும் இவருக்கு கராச்சி டெஸ்ட் அறிமுக போட்டியாகும். இதன்மூலம் மிக இளம் வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் 1949-ல் டி.பி. க்ளோஸ் 18 வயது 149 நாட்கள் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    ரேகன் அகமதுவுக்கு 18 வயது 126 நாட்கள் ஆகிறது.

    ×