என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lok sabha speaker"
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது.
- பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததும் பொருளாதார நிலை எப்படி மாற்றத்தை சந்தித்தது குறித்து வெள்ளை அறிக்கை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.
பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.
- இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
- பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. சிறந்த வலுவான இந்தியாவை உருவாக, ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.
நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு பிரச்சினையான சவால்களுக்கு தீர்வு காணும் திறனைப் நமது தேசம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றங்கள், எரிசக்தி உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்திய கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும்.
- பாராளுமன்றத்தில் தேவையற்ற கூச்சலிடுவதை எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும்.
மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா, பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது :
அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது. அரசியலமைப்பின் முன் அனைத்து மதங்களும் சமம். எம்.பி.க்கள் எந்த மதத்தைப் பற்றியும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டும். 17வது மக்களவையில் இதுவரை எட்டு அமர்வுகளின் கீழ் 1,000 மணி நேரம் சபை செயல்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது தேவையற்ற ஆக்கிரமிப்பு மற்றும் கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும். விவாதங்கள் எதிர் விவாதங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை அலங்கரிக்கின்றன.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மேடையாக பாராளுமன்றத்தை எம்.பிக்கள் பயன்படுத்தக் கூடாது. புதிய பாராளுமன்ற கட்ட பணிகளை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். நாளை இந்த கூட்டம் நடக்கிறது.
அந்த கூட்டத்துக்கு முன்பாக, பல்வேறு கட்சி தலைவர்களை சபாநாயகர் தனித்தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தியை சபாநாயகர் அழைத்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சமீபத்தில் நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தேன். அப்போது, இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி முடங்குவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த மக்களவை பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம். இன்னும் 3 கூட்டத்தொடர்கள்தான் உள்ளன. அவற்றிலும், மழைக்கால கூட்டத்தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும்தான் மசோதா தொடர்பான பணிகளை கவனிக்க முடியும்.
ஆகவே, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும். முதல்முறை எம்.பி. ஆனவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
கட்சி மேலிடத்தின் செல்வாக்குடன், வேட்பாளரின் நற்பெயரும் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியாது. எனவே, எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் பெற முடியும்.
எதிர்க்கட்சிகளின் யோசனைகளை பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு ஆகும்.
இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார். #LokSabhaSpeaker #SumitraMahajan #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்