search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "localbody election"

    • 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • விடுமுறை வழங்காத பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி ஒன்றியத்தில் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், அய்யம்பாளையம் 6-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் இச்சிப்பட்டி 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் 1-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இடைத்தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேர்தல் நடக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.

    தவறும்பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.
    • வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகத்தில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில் 12 என 510 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியம் -16வது வார்டு, பல்லடம் ஒன்றியம் - 1வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியம் - இச்சிபாளையம் ஊராட்சி தலைவர், அவினாநி- அய்யம்பாளையம் ஊராட்சி (6வது வார்டு), குடிமங்கலம் ஊராட்சி - 1வது வார்டு, காங்கயம் -ஆலாம்பாடி 9வது வார்டு, பொங்கலூர் - வடக்கு அவிநாசிபாளையம் 7 வது வார்டு, உடுமலை - அந்தியூர் 2வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நகர உள்ளாட்சியில் பதவிகள் காலியில்லை. மொத்தம் 8பதவிகளுக்கான தேர்தலுக்கு 30 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன.

    தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என 50 பேர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்லடம், அவிநாசி ஒன்றியங்கள், ஊத்துக்குளி இச்சிப்பாளையம் ஊராட்சி, வார்டு தேர்தல் நடக்கும் ஊராட்சி முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ந்தேதி பரிசீலனை, 30ந் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு ஜூலை 9ந் தேதி காலை,7மணி முதல், மாலை,6மணி வரை நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, 12-ந் தேதி நடைபெறும். கிராமங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் மற்றும் வார்டு உறுப்பினருக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.

    • தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
    • அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம், குடிமங்கலம் 1-வது வார்டு உறுப்பினர், காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    • தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா தேர்தலை நடத்திக் கொடுத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    மங்கலம் :

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டார அமைப்பு தேர்தல் மங்கலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா கலந்து கொண்டு தேர்தலை நடத்திக் கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் (பி.சி.சி) பதவிக்கு ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வே.முத்துராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு மங்கலத்தை சேர்ந்த சபாதுரை ,திருமலாகண்ணன், எபிசியண்ட் மணி, நடராஜ் ,அப்துல்அஜீஸ்,யாசுதீன்,செந்தில்,வேலுச்சாமி, அலாவுதீன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.
    • வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, காங்கயம், அன்னூர், சென்னிமலை ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள ஐஎன்டியுசி. அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர்.கோபி தலைமையில் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும்,பாலக்காடு முன்னாள் சேர்மனுமான.பி.வி.ராஜேஷ்,வட்டார தேர்தல் அதிகாரிகள் சுப்பிரமணியம்,தீபக் ஆகியோரிடம் தொண்டர்கள் வழங்கினர்.

    மேலும் இதே போன்று வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம்,அவிநாசி,காங்கயம்,அன்னூர்,சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார். #HighCourt #CivicPolls #RSBharathi
    சென்னை:

    கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் முறையாக தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எஸ்.டி.பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை ஒதுக்காமல் தேர்தல் நடத்த முற்பட்டதால் அதை சரி செய்து தேர்தலை நடத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

    பின்னர் இதை ஒழுங்குப்படுத்திய தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்துவதாக கூறியது. அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையவில்லை என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறியது.

    இப்படி ஒவ்வொரு முறை வழக்கு வரும் போதெல்லாம் காரணம் கூறி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தனர்.


    கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

    இதனால்தான் தி.மு.க. சார்பில் நாங்கள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

    தேர்தல் அட்டவணையை 6-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    எனவே இந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.

    கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்டால் அதை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது. எனவே தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HighCourt #CivicPolls #RSBharathi
    ×